Saturday, August 29, 2015

அடுத்த முதல்வராகும் வாய்ப்பு

அடுத்த முதல்வராகும் வாய்ப்பு என்று எடுக்கப்பட்டுள்ள கருத்துக் கணிப்பில் ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் முதல்வர் வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்கு சதவீதம் இது.
ஜெயலலதா 31.56 சதவிகிதம்
மு.க. ஸ்டா‌லி‌ன் 27.98 சதவிகிதம்
கருணாநிதி 21.33 சதவிகிதம்
விஜயகாந்த் 6.24 சதவிகிதம்
அன்புமணிக்கு 2.27 சதவிகிதம்
கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்துத் திணிப்பை ஏற்படுத்த முயன்றுள்ளதையே இது வெளிப்படுத்துகிறது.
ஒரு கட்சியின் சார்பில் ஒருவர்தான் முதல்வர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது பாமர மக்களும் அறிந்த விசயம். ஆனால் இந்த மேதாவிகள் மட்டும் முதல்வர் வேட்பாளர் என்று ஒரே கட்சியைச் சேர்ந்ந இருவரை முன்னிறுத்தி அதில் வாக்குப் பிளவை ஏற்படுத்தி, இரண்டாவது பெரிய கட்சி வேட்பாளரே வெற்றி பெறுவார் என ஆருடம் கூறுகின்றனர்.
இப்படி இருவரை முன்னிறுத்தாமல் ஒருவரை மட்டும் முன்னிறுத்தி கேட்கப்பட்டிருந்தால் இருவரும் பெற்ற சதவீதங்களின் கூட்டுத் தொகையே திமுக முதல்வர் வேட்பாளர் பெற்றிருக்க வேண்டிய சதவீதமாகும்.
ஆக, திமுக முதல்வர் வேட்பாளர் 49.31% பெற்று முதலிடத்திலும் ஜெயலலிதா 31.56% பெற்று மிகவும் பின் தங்கி உள்ளார் என்பதுவும்தான் தற்போதைய உண்மை.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval