Thursday, January 1, 2015

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு திருமணம் நடைபெற்றது


கீழக்கரை: இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜாவுக்கு மூன்றாவது முறையாக திருமணம் நடைபெற்றது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது காதலியான லண்டனைச் சேர்ந்த பாடகி சுஜாயாவை கடந்த 2005ம் ஆண்டு திருமணம் செய்தார்.

2008ம் ஆண்டு அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதன் பிறகு அவர் ஷில்பா மோகன் என்பவரை கடந்த 2011ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஷில்பாவுடனும் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து ஷில்பா யுவனை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது தாயின் மரணத்தால் மனமுடைந்த யுவன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். தனது பெயரைக் கூட அப்துல்லா என்று மாற்ற உள்ளார். தான் 5 நேரமும் தவறாமல் தொழுது வருவதாக யுவன் தெரிவித்தார். இந்நிலையில் யுவனுக்கும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த ஜப்ருன்னிஸாருக்கும் இன்று கீழக்கரையில் திருமணம் முடிந்தது. ஜப்ருன்னிஸார் துபாயில் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவனின் திருணமத்தில் இளையராஜா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் யாரும் பங்கேற்கவில்லை. அவரது நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து
கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1/1/2015 9:40:34 PM
தகவல் ;சவ்க்கத் அலி 
BOSTON, U.S.A.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval