1900-ம் ஆண்டுக்குப் பின் இதுவரையில் மிகசக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் உலகில் எப்போது எங்கே ஏற்பட்டது என்ற விவரம் வருமாறு:
1906
ஜனவரி 21: ஈக்வடார் கடலோரப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ( 88.8 ரிக்டர்) சுனாமி ஏற்பட்டதில் 500 பேர் பலி.
1922
நவம்பர் 11: சிலி-அர்ஜென்டினா எல்லையை யொட்டி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் (அளவு 8.5 ரிக்டர்) சுனாமி நிகழ்ந்து சிலி கடற்கரை சேதம்.
1923
பிப்ரவரி 3: ரஷ்யா விந்தூர கிழக்கில் உள்ள கம்சக்தாவில் நிலநடுக்கம் (8.5) மற்றும் சுனாமி.
1938
பிப்ரவரி 1: இந்தோனேசியாவில் பாண்டா கடற்பகுதியில் ஏற்பட்ட 8.5 ரிக்டர் நிலநடுக்கத்தில் சிறு அளவில் சுனாமி.
1950
ஆகஸ்ட் 15: திபெத்தில் 8.6 ரிக்டர் என்ற சக்திமிக்க நிலநடுக்கத்தில் 780 பேர் உயிரிழப்பு.
1952
நவம்பர் 4: ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள கம்சத்கா பகுதியில் 9 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதிலும் உயிரிழப்பு இல்லை, ஆனால் ஹவாய் தீவில் 9.1 மீட்டர் (30 அடி) உயரத்துக்கு பேரலை உருவானது.
1957
மார்ச் 9: அலாஸ்காவின் ஆண்டிரியான் தீவில் 8.6 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி காரணமாக 52 அடி உயரத்துக்கு பேரலை.
1960
மே 22: சிலியில் 9.5 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அதைத்தொடர்ந்து சுனாமி ஏற்பட்டு 1716 பேர் பலி
1963
அக்டோபர் 13: குரில் தீவில் 8.5 ரிக்டர் அளவில் சக்திமிக்க நிலநடுக்கத்தால் சுனாமி.
1964
மார்ச் 28: அலாஸ்காவில் உள்ள பிரின்ஸ் வில்லியம் சவுண்ட் பகுதியில் 9.2 என்ற அளவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம், சுனாமியால் 131 பேர் பலி.
1965
பிப்ரவரி 4: அலாஸ்காவின் ரேட் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் (8.7 ரிக்டர்) காரணமாக 35 அடி உயரத்துக்கு பேரலை.
2004
டிசம்பர் 26: இந்தோனேசியாவில் ரிக்டர் அளவுமானியில் 9.1 என பதிவான நில நடுக்கம் ஏற்பட்டு இந்தியப் பெருங்கடலில் சுனாமி உருவாகியதில் இந்தியா உட்பட 12 க்கும் மேற்பட்ட நாடுகளில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலி.
2005
மார்ச் 28: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 8.6 ரிக்டர் சக்தி கொண்ட நிலநடுக்கத்தில் 1,300 பேர் பலி.
2007
செப்டம்பர் 12: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே 8.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு 25 பேர் பலி.
2010
பிப்ரவரி 27: சிலியை உலுக்கிய 8.8 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டு 524 பேர் பலி.
2011
மார்ச் 11: ஜப்பானின் வடகிழக்கே 9.0 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டு 18 ஆயிரம் பேர் உயிரிழப்பு
2012
ஏப்ரல் 11: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 8.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 24க்கும் மேற்பட்ட நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval