Friday, April 3, 2015

ஆலிம்களின் மரணம்


இன்று (ஏப்ரல் 3) அதிகாலை திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் பள்ளப்பட்டி மக்தூமியா அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் எட்டு பேரும் முஅத்தினும் ஆக மொத்தம் 9 பேர் மரணமடைந்தார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னஇலைஹி ராஜிவூன் -இறைவனிடமிருந்தே வந்தோம் அவனிடமே திரும்பச் செல்வோம்). இறந்தவர்களில் சென்ற ஆண்டு வரை பொதக்குடி மத்ரஸாவில் முதல்வராக பணியாற்றிய அப்துர் ரஹீம் பாகவியும் ஒருவர்.
விபத்துச் செய்தி அறிந்து உடனடியாக திண்டுக்கல் மாவட்ட தமுமுக செயலாளர் பழனி பாரூக் தலைமையில் தமுமுக தொண்டர்கள் விபத்து நடைபெற்ற இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டார்கள்.
இத்துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரபிக் கல்லூரியின் 8 ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளது பெரும் துயரமானது. வல்ல இறைவன் இறந்தோரின் குடும்பத்தினருக்கும் நிர்வாகத்தினருக்கும் அழகிய பொறுமையை தருவானாக. இறந்தோருக்கு இறைவன் மறுமை நற்பேறுகளை அளிக்க பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval