Tuesday, September 6, 2016

*இது மிகவும் பயனுள்ள தகவல்.*

இது மிகவும் பயனுள்ள தகவல்.*
நாம் தற்போது சிம், இருசக்கர வாகனம், கடன் என எதுவாங்கும் போதும் , இன்னும் எந்த வேலையாக
இருந்தாலும் நம்முடைய *ஆதார் , ரேஷன் கார்டு , ஓட்டுநர் உரிமம் , வாக்காளர் அடையாள அட்டை என இன்னபிற ஆவணங்களில் , (Self Attest)* - கையெழுத்து இட்டு ஆதாரமாக தருகிறோம்.
நம்முடைய இந்த ஆவணங்களை , தெருவில் நின்று கொண்டு *சிம்* விற்கக் கூடியவர்களிடம் கூட சுய கையெழுத்து இட்டு கொடுத்து விடுகிறோம்.
அந்த ஆவணங்களை பெறக்கூடியவர்கள் அவர்கள் விரும்பியபடி இதனை எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அவர்கள் நம்மிடம் நம் *புகைப்படம்* கேட்டால் அதனையும் கொடுத்து விடுகிறோம்.
நம்மிடமிருந்து பெற்றுக் கொண்ட ஆவணங்களைக் கொண்டு , வேண்டுமானால் பல *சிம்*களை வாங்கலாம். அதனை எதற்கும் பயன்படுத்தலாம்.
சற்று முயற்சி செய்தால் நம் பெயரில் ஒரு வாகனத்தைக் கூட வாங்கி பதிவு செய்து விடலாம்.
இவ்வாறு , நம் பெயரில் வாங்கப்பட்டவைகள் ஒரு வேளை *தீவிரவாத செயல்களுக்கு* பயன்படுத்தப் பட்டால் , *நாம்* தான் *முதல் குற்றவாளி*யாக இந்திய குற்றவியல் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப் படுவோம்.
🔴🔵🔴
*இதிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்கு என்ன வழி ?*
இதற்குப் பிறகு நாம் கையெழுத்துப் போடும் போது கீழ்காணும் நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இந்த பிரச்சனைகளை தவிர்த்துக் கொள்ள முடியும்.
1. *கையெழுத்து*
2. *தேதி*
3. *கையெழுத்து இடுவதற்கான காரணம்.*
4. *இதனைத் தவிர்த்து வேறு எதற்கும் இது செல்லத்தக்கது அல்ல.*
இப்படி நாம் கொடுக்கும் ஒவ்வொரு ஆவணத்திலும் அதனை கொடுப்பதற்கான காரணத்தையும் தேதியையும் எழுதி கையெழுத்து இட்டு கொடுக்க வேண்டும்.

இதனை பிறருக்கு கூறுவது அவர்களை இத்தகைய ஆபத்திலிருந்து காப்பாற்ற வழிவகுக்கும். *பகிரவும்*
 Adirai Abdul Razak
chennai

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval