Friday, March 17, 2017

ஓவரா சீன் போட்டா* *இப்படித் தான்.🙄*

Image result for dog and donkey imagesஒரு சலவை தொழிலாளிகிட்ட ஒரு நாயும், கழுதையும் இருந்துச்சு.*
*ஒரு நாள் அந்த சலவை தொழிலாளி ராத்திரி நல்லா தூங்கிட்டுருக்கும் போது வீட்டுக்குள்ள கதவை உடைச்சிட்டு ஒரு திருடன் வந்துட்டான்.*

*சலவை தொழிலாளி நடப்பது தெரியாமல் நல்ல உறக்கத்திலிருக்க, திருடனைப் பார்த்த நாய் குரைக்காமல் கம்முன்னு இருந்துச்சு.*

*"சரியா சோறே போடறதில்லை, இவனுக்கு நாம ஏன் உதவி பண்ணனும்னு?", நாய் குரைக்க வில்லை.*

*அதைப்பார்த்த கழுதை என்னடா இவன் கம்முன்னு இருக்கான், குரைச்சு முதலாளியை எழுப்புவான்னு பார்த்தா சும்மா இருக்கான், சரி நாமளாவது சத்தம் போட்டு முதலாளிக்கு திருடன் வந்ததை அலர்ட் பண்ணுவோம்னுகத்த ஆரம்பிச்சுது.*

*சத்தம் கேட்டதும் கள்ளன் ஓடிவிட்டான்.*

*தூக்கத்தில் இருந்து எந்திருச்ச சலவை தொழிலாளி ஒரு கட்டையை எடுத்து பளார்னு கழுதை தலைல ஒரே அடி.* 

*"கூறுகெட்ட கழுதை நேரங்காலம் தெரியாம கத்திகிட்டு இருக்க" கழுதையை திட்டிவிட்டு திரும்பவும் படுத்துகிட்டான்.*

*நீதி : கம்பெனியில் என்னவேலை* *கொடுக்கபட்டிருக்கோ*
*அதை மட்டும் தான்* *செய்யனும் ஓவரா சீன் போட்டா*
*இப்படித் தான்.🙄*

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval