Saturday, June 21, 2014

பொன் மொழிகள் நம் கண்மணிகள்


Businessman practicing presentation with coach Stock Photo - Premium Rights-Managed, Artist: Ikon Images, Code: 852-06961135புகழ் என்பது நம் செயல்களின் எதிரொலி. 
********** 
கருமியின் நெஞ்சம் சாத்தானின் இருப்பிடம் . 
********** 
நோய் வரும்வரை உண்பவன் உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டிவரும்.
 
********** 
அறிவற்ற அச்சம் இடையூறுகளை இரட்டிப்பாக்குகிறது. 
********** 
நன்றி மறத்தலில் எல்லா கெட்ட குணங்களும் அடங்கும். 
********** 
முட்டாள் தனக்கே முகஸ்துதி செய்துகொள்வான். 
********** 
நெருக்கமான பழக்கம் முதலில் அன்பை உண்டாக்கும்.முடிவில் வெறுப்பை வளர்க்கும்.
********** 
நம்மிடம் எதுவும் இல்லை என்று நினைப்பது ஞானம். 
நம்மைத்தவிர எதுவும் இல்லை என்று நினைப்பது ஆணவம். 
********** 
முதல் குற்றத்தை சரி என்று சாதிப்பவன் 
இரண்டாவது குற்றத்தையும் செய்தவனாகிறான். 
********** 
அன்பில்லாத இடத்தில் முகங்கள் வெறும் படங்கள்;பேச்சுக்கள் வெறும் கிண்கிணி ஓசைகள். 
********** 
முட்டையைக் கொடுத்து காசு வாங்குபவன் வியாபாரி. 
காசைக் கொடுத்து முட்டையை வாங்குபவன் சம்சாரி. 
எதையும் கொடுக்காமல் எல்லாம் வாங்குபவன் அரசியல்வாதி. 
********** 
எப்படியும் செய்ய வேண்டிய ஒரு செயலை புன்முறுவலுடன் செய்வதற்குப் பெயர்தான் ஒத்துழைப்பு. 
********** 
ஒரு பழக்கத்தை சும்மா ஜன்னல் வழியே தூக்கி எறிந்து விட முடியாது.தாஜா செய்து ஒவ்வொரு படியாகக் கீழே இறக்கிக் கொண்டு வர வேண்டும். 
********** 
பணம் பேசக் கூடியது மட்டுமல்ல பேசுபவர்களின் வாயை அடைக்கக் கூடியதும் ஆகும்.
********** 
ஒவ்வொரு திறமை வாய்ந்த மனிதனின் மூளையிலும் முட்டாள் தனமான பக்கம் ஒன்று கட்டாயம் உண்டு. 
********** 
சிறு கேள்விகளுக்கு நீண்ட விடை அளிப்பவனிடம் சற்று ஜாக்கிரதையாக இருங்கள்.ஏனெனில் நிச்சயமாக அவன் எதையோ மறைக்கிறான். 
********** 
முகஸ்துதி உப்பைப் போன்றது.கொஞ்சம் உபயோகித்தால் தான் ருசியாய் இருக்கும்.அதிகமானால் கரிப்பாக இருக்கும். 
********** 
இரண்டு நண்பர்களிடையே மத்தியஸ்தம் செய்யாதீர்கள்.செய்தால் ஒரு நண்பனை இழப்பீர்கள். 
இரண்டு அன்னியர்களிடையே மத்தியஸ்தம் செய்யுங்கள்.செய்தால் ஒரு நண்பன் கிடைப்பான். 
********** 
அதிகப் பேச்சு,பொய் இரண்டுமே நெருங்கிய நண்பர்கள். 
********** 
நாம் அனைவரும் மரண தண்டனைக்குள்ளானவர்கள் தான்.தூக்கிடும் நாள் தான் வித்தியாசம். 
********** 
செய்து காட்டுபவர்கள்தான் குழந்தைக்குத் தேவை.குறை காண்பவர்கள் அல்ல. 
********** 
அடிக்கடி தவறு செய்பவன் அப்பாவி. 
ஒரே தவறை திரும்பத் திரும்பச் செய்பவன் மூடன்.
ஒரு தவறும் செய்யாதவன் மரக்கட்டை. 
தன்னை அறியாமல் தவறு செய்து பின் திருத்திக் கொள்பவன் மனிதன். 
********** 
பொய்களால் தடவிக் கொடுப்பதைவிட 
உண்மையால் அறைவதே மேலானது. 
********** 
பிறருக்குப் பயன்படுங்கள். 
பிறரால் பயன் படுத்தப் படாதீர்கள். 
********** 
முதிய தலைமுறையைக் குறை சொல்வதை நிறுத்திவிட்டு இளைய சமுதாயத்தைக் குறை சொல்ல ஆரம்பிக்கும்போது உங்களுக்கு நடுத்தர வயது. 
********** 
முன்னேற்றம் என்பது ''இருப்பதைத் தக்க வைத்துக் கொள்வது தான்'' என்று நினைக்கும் கால கட்டம் தான் முதுமைப் பருவம். 
********** 
உங்களுக்கு மூக்கின் மேல் கோபம் வரும்போது,வாயை மூடிக் கொள்ளுங்கள். 
**********

Thank You : கே இனியவன்

பதிப்புரை N.K.M.புரோஜ்கான் 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval