Monday, June 9, 2014

யோசித்தல் !


நேசிக்கும் உறவுகளும்
யோசிக்கும் சிலசமயம்
நெஞ்சத்தில் பகைகொள்வோர்
வஞ்சிக்க யோசிப்பர்

நேசிக்கும் குணமுடையோர்
யோசிப்பில் பலனிருக்கும்
வாசிப்போர் யோசிப்பில்
இனிய ராகம் நிறைந்திருக்கும்

எண்ணத்தில் தூய்மையுள்ளோர்
திண்ணமாய் யோசிப்பர்
வண்ணத்தில் வானவில்லாய்
வாழும் வரை வீற்றிருப்பர்

யோசிப்பில் பல உண்டு
யோசிப்பார் அறிவது நன்று
காசுக்கும் அடிமையுண்டு
காலம் கடந்து யோசிப்பதுண்டு

முன்னோர்கள் யோசிப்பில்
முளைத்ததிந்த விஞ்ஞானம்
இன்னோர்கள் யோசிப்பில்
இகம் முழுதும் காணும் ஞானம்

ஆலோசித்து செயல்பட்டால்
அகிலமெல்லாம் தழைத்தோங்கும்
அரவணைக்கும் நடத்தையிலே
அன்பு பாசம் நிலைத்திருக்கும்

யோசித்துச் செயல்படுதல்
யாவர்க்கும் நன்மை பயக்கும்
நேசிப்போர் இல்லையெனில்
நெகிழ்ந்து மனம் யாசிக்கும்

அவசியமற்ற யோசிப்பில்
அறிவு மங்கி திறமை மறையும்
ஆதி முதல் யோசித்தால்
சாதி மறைந்து சமத்துவம் ஓங்கும்

இறையோனை யோசித்தால்
ஈருலகில் வெற்றி கிட்டும்
மறுமையினை யோசித்தால்
மகா பாவம் அனைத்தும் ஒழியும்

நாட்பொழுதும் யோசித்தால்
நலத்தில் கேடு விளைவிக்கும்
நாமும் ஒருகணம் யோசித்து
நலனைச்செய்து  பயனடைவோம்.

அதிரை மெய்சா 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval