Monday, March 3, 2014

சூரியனுக்கு செயற்கைக்கோள் ... 2020ம் ஆண்டில் அனுப்ப இஸ்ரோ புதிய திட்டம்


சென்னை: 2020 -ம் ஆண்டில் சூரியனுக்கு ஆதித்யா என்ற செயற்கை கோளை அனுப்ப இஸ்ரோ திட்டம் தீட்டியுள்ளது. 

வரும் 2020-ம் ஆண்டில் சூரியனுக்கு செயற்கைகோள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது என இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் தனியார் பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் " வரும் 2017 முதல் 2020 ஆம் ஆண்டிற்குள்ஆதித்யா என்ற பெயரில் சூரியனுக்கு செயற்கை கோள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக இரண்டாம் கட்டமாக சந்திராயன்-2 செயற்கை கோள் தயாரிக்கப்பட்டு அதனை நிலவில் தரையிறங்க வைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. 

தற்போதைய சூழ்நிலையில் ஜி.எஸ்.எல்.வியின் திறனை மேம்படுத்தும்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2014 முதல் 2017 ஆம் ஆண்டிற்குள் நான்கு டன் அளவு அதி்கரிக்கப்பட உள்ளது.தொடர்ந்து 2020-ம் ஆண்டிற்குள் மேலும் ஆறு முதல் 10 டன் அளவு திறனை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தேசிழய பேரிடர் தடுப்பிற்காக அனுப்பப்பட்ட கல்பனா, இன்சாட் 3-டி செயற்கை கோள் மிகவும் உதவிக்கரமாக செயல்பட்டு வருகிறது. அவை அனுப்பிய 400க்கும் மேற்பட்ட புகைபடங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என கூறினார். 

இந்திய பகுதிகள் குறித்து ஆராய்வதற்காகஅனுப்பப்பட உள்ள ஐ.ஆர். என்.எஸ்.எஸ் 1-பி வகை செயற்கை கோள்கள் அமெரிக்காவின் குளோபல் பொசிசன் முறைக்கு நிகரானதாக அமையும் என தெரிவித்தார். 

மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கல்யான் செயற்கை கோள் திட்டமிட்டபடி சரியானபாதையி்ல் செல்வதாகவும் , அதன் மொத்த பயண தூரமான 680 மில்லியன் கி.மீ தூரத்தில் தற்போது மூன்றில் ஒருபங்கு தூரத்தை கடந்து இருப்பதாகவும் தெரிவித்தார். 

Thank you : http://tamil.oneindia.in
    தகவல் N.K.M .புரோஜ்கான் 
    அதிரை

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval