Wednesday, March 5, 2014

தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 24ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல்

டெல்லி: தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 24-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையர் சம்பத் டெல்லியில் இன்று வெளியிட்டார். நாடு முழுவதும் ஏப்ரல் 7-ந் தேதி முதல் மே 12-ந் தேதி வரை 9 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 24ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல்



இதில் தமிழகத்தில் 6வது கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும். அதாவது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 24-ந் தேதியன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் மே 16-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
courtesy;one india,in

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval