Monday, September 25, 2017

​கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் வாகனம், கணிப்பொறிகள் ஜப்தி..!


​கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் வாகனம், கணிப்பொறிகள் ஜப்தி..!கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரத்தில் உரிய இழப்பீடு வழங்கப்படாததால் நீதிமன்ற உத்தரவின்பேரில் மாவட்ட ஆட்சியரின் வாகனம் ஜப்தி செய்யப்பட்டது. 

வல்லகுமாரன்விளை பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் மற்றும் அவரது உறவினர் சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு சொந்தமான 42 சென்ட் நிலத்தை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடந்த 1994-ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. 

இதற்கு உரிய இழப்பீடு வழங்கப்படாததால் நாகர்கோவில் நீதிமன்றத்தை அணுகிய அவர்களுக்கு, வட்டியுடன் இழப்பீட்டை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அந்த தொகையும் வழங்கப்படாததால் நீதிமன்ற உத்தரவின்பேரில் மாவட்ட ஆட்சியரின் கார் மற்றும் அவரது அலுவலகத்தில் இருந்த 10-க்கும் மேற்பட்ட கணினிகள் ஜப்தி செய்யப்பட்டன. 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval