Friday, September 22, 2017

​ஆதார் எண் திருத்த வந்தவர்களுக்கு PayTM கணக்கு தொடங்கி கொடுத்ததால் சலசலப்பு!

​ஆதார் எண் திருத்த வந்தவர்களுக்கு PayTM கணக்கு தொடங்கி கொடுத்ததால் சலசலப்பு!
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் ஆதார் எண் திருத்த வந்த மக்களுக்குப் பேடிஎம் கணக்குத் தொடங்கிக் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண்ணை இணைப்பதற்காக வந்த பொதுமக்களிடம் இளைஞர் ஒருவர் கைவிரல் பதிவுகளை எடுத்துள்ளார். 

இப்படி இணைத்தவர்களின் செல்பேசிக்கு வந்த குறுந்தகவலில் புதிய பேடிஎம் கணக்குத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து சந்தேகத்தின்பேரில் அந்த இளைஞரைப்பிடித்து பிடித்து விசாரித்ததில் அவர் மாநகராட்சி ஊழியர் இல்லை என்பது தெரியவந்தது. 

அவர் ஆதார் அட்டை திருத்தம் செய்ய வருவபர்களிடம் அனுமதி பெறாமல் அவர்களுக்குப் பேடிஎம் கணக்கைத் தொடங்கிக் கொடுத்ததும் தெரியவந்தது. 

அவர் அரசு கலைக்கல்லூரியில் பயின்று வரும் மாணவர் என்பது தெரியவந்ததால் மாநகராட்சி அதிகாரிகள் அவரை எச்சரித்து அனுப்பினர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval