Tuesday, September 26, 2017

ஆட்சியருக்கு இந்த மாதம் சம்பளம் இல்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!


மூதாட்டிக்கு வாடகை கொடுக்காத ஆட்சியருக்கு இந்த மாதம் சம்பளம் இல்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
Image may contain: 1 personமாதவரத்தில் உள்ள தனது இடத்தில் கடந்த 2009 ஆண்டு வட்டாட்சியர் அலுவலகம் அமைத்து அதற்கான வாடகையை அதிகாரிகள் இதுவரை தரவில்லை,
இது தொடர்பாக திருவள்ளுர் ஆட்சியரிடம் புகார் அளித்தும் அதை கண்டு கொள்ளவில்லை என ஃபரிதா என்ற 69 வயது மூதாட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நிதிபதி வைத்தியநாதன் , வாடகை தராமல் பாட்டியை அலைகழித்த திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உட்பட 3 பேருக்கு இந்த மாதம் சம்பளம் வழங்க தடை விதிக்கின்றேன். மேலும் பாட்டியின் வாடகை பாக்கியை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.
Image may contain: outdoorவயதான பாட்டிக்கு தயவு தாட்சன்யமின்றி நீதி அளித்த நீதியரசருக்கு பாட்டி நன்றியை தெரிவித்தார்.
குறிப்பு : படத்தில் இடம் பெற்றிருப்பது மாவட்ட ஆட்சியர்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval