Friday, September 29, 2017

கட்டிமுடிக்கப்பட்டு ஒரே வாரத்தில் பெயர்ந்து விழுந்த பேருந்து நிழற்குடை!


கட்டிமுடிக்கப்பட்டு ஒரே வாரத்தில் பெயர்ந்து விழுந்த பேருந்து நிழற்குடை! கோவை அருகே ஒரு வாரத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடை அடியோடு பெயர்ந்து விழுந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

கோவையில் எட்டிமடை அருகே மகேந்திரமேடு என்ற இடத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டது.

இந்த நிழற்குடை இன்று திடீரென அடியோடு பெயர்ந்து விழுந்துள்ளது. புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிழற்குடை ஒரே வாரத்தில் பெயர்ந்து விழுந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் மேலும் 11 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிழற்குடைகளின் தரம் குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval