Tuesday, September 5, 2017

மாட்டுத்தொழுவத்தில்_வாழும்...தமிழக மாஜி_MLA..!

 கிருஷ்ணவேணி ex M.L.A
பழைய போட்டோ 
                                        கண்ணீரை_வரவழைக்கும்...
#உண்மைக்கதை!!.😢😢

👣 அரசியல்வாதிகளில் மாண்புமிகு மாவட்டங்கள், நகரங்கள் மட்டுமல்ல; 
ஒன்றிய அளவிலுள்ள கரை வேட்டிகளெல்லாம் கூட இன்றைக்கு ‘பொலிரோ என்ன ஸ்கார்ப்பியோ என்ன என விலையுயர்ந்த கார்களில்’ பறந்து கொண்டிருக்க…

👣 நிறைய சொத்துக்களுடன் கணவன் மனைவி இருவருமே ஆளும்கட்சி எம்.எல்.ஏ. என்பதெல்லாம், 
பொய்யாய் பழங்கதையாய்ப் போய், 
மாட்டுத் தொழுவத்தில் ஒரு மாஜி பெண் எம்.எல்.ஏ. வாழ்கிறார் என்பதைக் கேள்விப்பட்டபோது, 
நிஜமாகவே அதிர்ச்சியாக இருந்தது.

👣 சில நாட்களுக்கு முன் தேனி மருத்துவக் கல்லூரி டாக்டரிடம் பேசிக் கொண்டிருந்தபோது.....

💥அவர் கூறியது நம்மை அதிர வைத்தது

#அவர்_கூறியதாவது......

👣 ஒரு வயசான எம்.எல்.ஏ.அம்மா ரொம்ப சிரமமாக, வைத்தியம் பார்க்கக் கூட காசில்லாமல், வெகு சாதாரணமாக வரிசையில் வந்து நின்றார்.

👣 அவரைப் பற்றி கேள்விப்பட்டபோது, ஷாக்காக இருந்தது. நீங்களும் விசாரித்துப் பாருங்கள்!’ என்று சொன்னார்.

👣 தேனி அருகிலுள்ள அம்மச்சியா புரத்தில் கிருஷ்ணவேணி என்ற 82 வயதான முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசித்து வருகிறார் என்று தெரியவந்தது.

👣 நேரில் சந்திக்கச் சென்றோம். 
ஊரின்கடைசியில் வரிசையாக மாட்டுக் கொட்டகையில் மூன்று போர்ஷன்கள் இருக்க, ஒரு மூலையில் ஒரே ஒரு குண்டு பல்ப் மட்டும் எரிந்து கொண்டிருந்தது. 
அங்கே நிறைய மாத்திரைகளுடன்
பரிதாபமாகப் படுத்திருந்தார் முன்னாள் எம்.எல்.ஏ.வான கிருஷ்ணவேணி. 

👣 மிகுந்த சிரமத்துடன்தான் எழுந்து உட்கார்ந்தார். நான் பாட்டுக்கு கூலிக்குப் போயி சம்பாதிச்சு சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன். லேசா சளி மாதிரி மூச்சடைச்சது. அப்புறம் ரத்த வாந்தியா வந்திருச்சு. 

👣 அதுக்கு வைத்தியம் பார்க்கப் போயித்தான் உங்களுக்கெல்லாம் தெரிஞ்சு போச்சு போலிருக்கு’’ என்றார் விரக்தியுடன்.

👣 பிறகு, அவரே சிறு இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்தார்..
என்னோட வீட்டுக்காரர் அய்யனார், 
ராஜாஜி காலத்துல 1952 லிருந்து ஐந்து வருசம் நிலக்கோட்டை எம்.எல்.ஏ.வா காங்கிரஸில் இருந்தார்.

👣 அப்ப நிலக்கோட்டைன்னா சோழவந்தான் தொகுதியும் சேர்ந்ததுதான்.

👣 அதுக்குப் பின்னாடி நான் 1962லிருந்து ஐந்து வருஷம் ஆண்டிப்பட்டி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வா இருந்தேன்.

👣 அப்போ ஆண்டிப்பட்டியில சேடப்பட்டியும் சேர்ந்துதான் இருந்துச்சு. 

👣 பக்தவத்சலம், காமராஜர் ஆட்சியில நான் எம்.எல்.ஏ.வா இருந்தேன்.

👣 நாங்க நல்ல செல்வாக்கா இருந்தோம். தேனியில அய்யர் மெமோரியல் பள்ளியும், அய்யர் அரிஜன் ஆண்கள் ஹாஸ்டலும், மகாத்மா காந்தி பெண்கள் ஹாஸ்டலும், பெரிய குளத்துல நந்தனார் ஹோமும் பள்ளிக்கூடத்துப் பசங்களுக்காக நடத்தி வந்தோம்.

👣 நாங்க எங்க மூணு மகன்களோடு ஸ்கூல் உள்ளேயே ஒரு வீட்டுல இருந்தோம்.

👣 எங்க வீட்டுக்காரர் ஒரு தடவை, 
பள்ளிக்கூடம் பெரிசாகுது. இதுல நாம குடித்தனம் பண்ணக் கூடாது. 

👣 இதை அரசாங்கத்துக்கே எழுதிக் கொடுத்துட்டு தனியா போயிடலாம்’ன்னு சொன்னார்.

👣 அதே மாதிரி 35 ஏக்கர் உள்பட 
எல்லாத்தையும் 1963 ல் தானமா அரசாங்கத்துக்கு இலவசமா  எழுதிக் கொடுத்துட்டோம்.
💥(இப்ப இருக்கிற நம்ம அரசியல்வாதிகள் அவங்கவங்க வீட்டு பக்கத்துல இருக்கிற நிலத்ததயும் இல்ல சேத்து எடுத்துகிறாங்க.). 

👣 சுந்தரமூர்த்தி, வெற்றி வேந்தன், மூவேந்தன் என்ற மூன்று மகன்களுடன் நாங்க அம்மச்சியாபுரத்துல தான் வசித்து வந்தோம்.

👣 அவருக்கு காமராஜர்னா உசிரு. 
காமராஜர் இறந்தப்ப, 77 பானைகளை உடைச்சு, நிறையப்பேர் மொட்டை போட்டு துக்கம் அனுஷ்டிச்சோம்.

👣 மெட்ராஸ்ல தலைவருடைய இரங்கல் கூட்டத்தில் கலந்துட்டு வர்றேன்னு சொல்லிட்டுப் போனவர், துக்கம் தாங்காம அங்கேயே செத்துப் போயிட்டார்.

👣 அதுக்குப் பின்னாடி ரொம்ப சிரமமாப் போயிடுச்சு. 

👣 ஒத்தைப் பொம்பளையா மூணு பிள்ளைகளை வளர்க்க கஷ்டப்பட்டேன்.

👣காசு செலவுபண்ண வழியில்லாததால அரசியல் பக்கம் போக முடியல.
#நாங்க_அதுல_சம்பாதிச்சு_பழகலையே! (என்ன ஒரு அருமையான வார்த்தைகள். நெஞ்சு கணக்குதுங்க)

👣 மூத்த பையன் நாலு குழந்தைகளைப் பெத்ததுக்கு பின்னாடி அவனும் மருமகளும் உடம்பு சரியில்லாம செத்துப் போயிட்டாங்க.

👣 இரண்டாவது பையன் என்னோடதான் இருக்கான். அவனும் ஆஸ்துமா பிரச்னைனால ரொம்ப சிரமப்படுறான். 

👣 1977_ல் தி.மு.க.வுல ஆண்டிபட்டி வேட்பாளரா அவனைப் போட்டாங்க
(நமக்கு தான் நல்லவங்களை வாழ வைத்து பழக்கமே இல்லையே). 
ஆனா தோத்துப் போயிட்டான்.

👣 மருமக ரேணுகா இப்ப கூலி வேலைக்குப் போய் குடும்பத்தை நடத்திக்கிட்டு இருக்கா.

👣 மூணாவது பையன் மூவேந்தன் 
டி.எஃப்.டி. முடிச்சு சினிமா எடுக்கறேன்னு மெட்ராஸ்லயே இருந்தான்.

👣 இளையராஜா வந்து பூஜையெல்லாம் போட்டு, வாணிவிஸ்வநாத் கதாநாயகியா நடிக்க படமெல்லாம் ஆரம்பிச்சாங்க.

👣 ஆனா, அவன் திடீர்னு காங்கிரஸ் கட்சியில் ஈடுபாடா போய்ட்டான். 

👣 அப்படியே சரத்பவார் கட்சிக்கு மாறினான். கல்யாணத்துக்கு முன்னாடியே உடம்பு சரியில்லாம, 
கிட்னி ஃபெயிலியராகி 2003 ல் இறந்துட்டான்.

👣 மூவேந்தன் தான் நல்ல நிலைமைக்கு வந்து குடும்பத்தைக் காப்பாத்துவான்னு நினைச்சேன். ஆனா அவனுக்கே லட்சக்கணக்கா கடன் வாங்கி வைத்தியம் பார்த்துக் கடன்காரி அனது தான் மிச்சம்.

👣 எல்லாக் கட்சிக்காரங்களும் எனக்கு நல்லா தெரிஞ்ச வங்கதான். ஆனா அதவச்சு அவங்ககிட்டே உதவி கேக்கத்தான் சங்கடமா இருக்கு
(இப்படியும் இருக்காங்க பாருங்க சார் மனிதர்கள்... நம்ம தெருவுல் எம்.எல்.ஏ இருந்தாலே நாம் விடுற அலும்பு தாங்காது.).

👣 இதனால் கிடைக்கற கூலி வேலைக்கெல்லாம் போவேன். கூட இருக்கற பொண்ணுககிட்டே நான் முன்னாள் எம்.எல்.ஏ.ன்னு சொல்ல வேண்டாம்னு சொல்லிடுவேன். 

👣 நானும் அவரும் சமபந்தி விருந்து கொடுத்த பருத்திக்காட்டுலயே எண்பது ரூபாய் கூலி வேலைக்குப் போனேன். 
அன்னிக்கு எனக்கு கண்ணீரே வந்துருச்சு...😢😢

(வசதியா இருந்துட்டு ஏழ்மை நிலைமை அடைவது.. உலகத்திலேயே கொடுமையான விஷயம் 
அதுவும் 35 ஏக்கர் நிலம் பில்டிங் ஸ்கூல் 
நல்ல  வருமானம் எல்லாத்தையும் அரசாங்கத்துக்கு இலவசமா எழுதிக் கொடுத்துட்டு... ஐயோ மக பரிதாபம் ???).

👣 ‘அய்யனார்புரம்’ னு அவரு மேல இருந்த மரியாதையில ஒரு ஊரையே மக்கள் கூப்பிட்டாங்க. 
ஆனா இப்ப என் நிலைமை?

👣 சமீபத்தில் உடம்புசரியில்லாம போய், 
தேனி ஆஸ்பத்திரில வரிசைல நின்னேன். என்னைத் தெரிஞ்சுக்கிட்ட டாக்டர் வந்து, ‘உள்ள வாங்கம்மா’ ன்னு அழைச்சிட்டுப் போனார்.

👣 ‘மாத்திரை வாங்க காசில்லாமயா கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு வந்தீங்க?’ ன்னு கவலையா கேட்டார்.

👣 இப்பவும் அவுரு தயவுல தான் மாத்திரை கொடுத்திட்டு வர்றாங்க 
(மனிதர்கள் இன்னமும் உயிரோட தான் இருக்காங்க).

👣 எம்.எல்.ஏ. பென்ஷன் ரூ 250 ல ஆரம்பிச்சு இப்ப ஆறாயிரம் ரூபாய் வாங்குறேன்.

👣 அதுல கடனுக்கே அஞ்சாயிரம் போயிடுது. மீதி ஆயிரத்தில தான் எல்லாம் பண்ண வேண்டிருக்கு.

👣 என் மருமக ரேணுகா தினசரி ரூ30 இல்ல 40 ரூபாய் கொண்டு வருவா. என் பேரன் இருபது ரூபா கூலி வாங்கிட்டு வருவான்.

👣 இப்படியே தான் வாழ்க்கை நகருது. 
என் உடம்பு நல்லா இருந்தா நானே கூலிக்குப்போய் சமாளிப்பேன். 
ஆனா முடியல… 
கடனையும் அடைக்க முடியல!’’ என்றார்.

👣 கிருஷ்ணவேணிக்குப் பாதுகாப்பாக இருக்கும் அவரது பேரன் யோகபிரபு, 
‘‘பாட்டி வேலைக்குப் போக முடியாததால நான் கடை வேலைக்குப் போய்ட்டு வந்து, இவங்களை பாத்துக்கறேன்.

👣 பிரஷர் வந்து ரத்தவாந்தி எடுத்ததிலிருந்தே ரொம்ப நம்பிக்கையில்லாம இருக்காங்க. 

👣 இப்பத்தான், நாம முந்தி எப்படியெல்லாம் இருந்தோம்… ஆனா கடைசில இந்த நிலைமைக்கு
வந்துட்டோமேன்னு கவலைப்படறாங்க.

👣 பாட்டி பங்குக்கு இந்த மாட்டுக் கொட்டகை மட்டுந்தான் மிச்சம். 
இப்ப மாடெல்லாம் இல்லாததால, 
சுவர் வச்சுத்தடுத்து அவங்க 
படுக்கறதுக்கு இடம் ஒதுக்கியிருக்கோம்!
என்றான். 

👣 பேசிக் கொண்டிருக்கும்போதே கிருஷ்ணவேணி தட்டுத் தடுமாறி எழுந்து இரண்டு பைகளை எடுத்துப் பழைய போட்டோக்களையெல்லாம் காட்டினார்.

👣 அந்த இரண்டு பைகள், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான சில தட்டுமுட்டு சாமான்கள், 
நிறைய மாத்திரைச் சீட்டுகள்… 

👣 இவை தான் லட்சாதிபதியான 
இந்த மாஜி எம்.எல்.ஏ.வின் கணவனும் மனைவியுமாக 10 வருடம் தேச சேவை  உண்மையும் உத்தமுமாக செய்த இந்த ஏழை தியாகியிடம்  பிரதான சொத்தாக இருக்கிறது.

❄ இந்த நிலையிலும் நம்மிடம்,
#ஏதாவது_குடிச்சிட்டுப்_போங்க...
(கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே)
என்று தடுமாறி ஸ்டவ் அருகில் போனவர், தலை சுற்றி அப்படியே உட்கார்ந்து விட்டார். 

👣 ‘‘#என்னால_முடியலையே....’’ என்றபடி அழவும் ஆரம்பித்தார். இப்படியும் கூட ஒருவர் இருக்க முடியுமா என்ற வேதனையுடன் விடைபெற்றோம்.

#நன்றி
திரு. பவானி E ராஜேஸ்.
News2.in

#குறிப்பு;
இந்த மாதிரி செய்தியை பரப்புவோம்.
யாராவது காங்கிரஸ் தலைவர்களோ...,
மனிதாபிமானமுள்ள.. அரசியல்வாதிகளோ.. 
(யாராவது இருக்காங்களா என்ன ???!!!) பார்த்து திருமதி.கிருஷ்ணவேணி அம்மையாரின் கடைசி காலத்திலாவது ஏதாவது உதவி செய்து புண்ணியம் தேடிக்கொள்ளட்டும்.

செய்வீர்களா...?
நீங்கள் செய்வீர்களா...??

படித்தேன்!
பகிர்ந்தேன்!!
தகவல் ;N,K,M,புரோஜ்கான் 
Sydney,Australia

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval