Saturday, June 18, 2016

இதை எழுதியது யாருன்னு தெரியல..... அருமையாக இருக்கு..

RAMADAN MUBARAK to all my Muslim friends around the world! I wish you ...விசித்திரமானவர்கள் 
முசல்மான்கள் !
பொழுது விடிந்தால்
சாயா காப்பியிலிருந்து
பொழுது அடைந்தால் பேயம்பழம்வரை
ஆகாரங்களால்
வயிற்றை அடைத்தே வாழ்பவர்கள்
நாங்கள் !
காலை பத்து மணிக்குள்
இடியாப்பமோ
ரொட்டியோ
முறுகின முறுவலோ
உள்ளே போகாவிட்டால்
க்ஷீணம் வந்து விடும் எங்களுக்கு !
மதிய வேளை
மணக்க மணக்க
பொரிச்ச மீனும்
கறிவச்ச மீனும்
இருந்தால்தான்
தொண்டையில் இறங்கும் சோறு !
ராத்திரிக்கு
இருக்கவே இருக்கு
பானு சிக்கன் புரோட்டாவும்
மட.டன் சால்னாவும் !
ராத்திரி ஒரு நேரம்
கொஞ்சம் குறைந்தாலும்
வயிறு பொறுக்காது
குப்புறப் படுத்தாலும்
தூக்கம் வரவே வராது !
வக்கணையாய்
மூணு நேரம் உண்டாலும்
ஏத்தங்காய் சிப்சும்
மயில்கடை சமோசாவும்
அக்காம்மா கொடுத்துவிட்ட
ஆட்டுக்கால் கேக்கும்
தின்று முடிச்சுதான்
சாயங்காலம்
சாயா குடிப்போம் !
செவ்வாய்
வெள்ளி
சனித் தவிற
மற்ற நாளெல்லாம்
திங்கிற நாட்கள்.
அதாவது...
கல்யாண வீட்டின்
கடைசிச் சட்டி
காலியாகும்வரை
கர்ம சிரத்தையாய்
காத்திருந்து
பிரியானி திங்கும் நாட்கள் !
மற்ற நாட்களையும்
நாங்கள் மதிக்கத் தெரிந்தவர்கள்தான் !
ஃபாத்தியா
காது குத்து
மைலாஞ்சி
சுன்னத்
மறுவீடு
பால்காய்ச்சு
வலிமா
இன்னும் வரிசையா
இப்படி விருந்து வைக்கிறீங்களேம்மா என்று
அலுத்துக் கொள்ளும் நாட்கள் !
வாழ்க்கையில்
மேடுபள்ளம் இருந்தாலும்
எங்கள் வயிறுகளில் மட்டும்
பள்ளம் விழ
விடுவதேயில்லை நாங்கள் !
கம்பளம் காய்கறிக்கடைக்காரனும்
கனகமூலம் சந்தை கதிர்வேலனும்
சிரிச்சுகிட்டே சொல்வாங்களே ...
" பாய்..
தின்று கெட்டவன் துலுக்கன் " ன்னு.
அதுதாங்க எங்க குணம்.
திங்கவும் செய்வோம்
திங்கக் கொடுக்கவும் செய்வோம்.
அப்படி இருந்த நாங்கதான்
இப்போ
இப்படி ஆயிட்டோம்!
விடிகாலை
அஞ்சு மணியிலிருந்து
சாயங்காலம்
ஏழுமணிவரை
பச்சத்தண்ணிக்கூட குடிக்காம
பட்டினியா
வாழ்ந்துகிட்டிருக்கோம் !
கோழி பொரிக்கும்
வாசனையை வைத்தே
கோழியின் ருசியை சொல்ற
எங்க நாக்கு
மூக்கைத் தொளைக்கிற
மட்டன் குருமா வாசனை
வீசிய பிறகும்
உமிழ் நீரைக்கூட சுரக்காமல்
உணர்வில்லாமக் கிடக்கே !
சாயா இல்லேன்னா
சவம்போல இருந்தவங்க
சுப்ஹ் தொழுது
சுறுசுறுப்பா குர்ஆன்
ஓதுறதைப் பார்த்தா
இவங்களா இப்படின்னு
ஆச்சரியம் வருதே !
சிகரெட்டை ஊதித் தள்ளியவங்க
அதன் சிந்தனையே இல்லாமல்
இறைவனை
சிரம் பணிந்து கிடப்பதை
எங்கேனும் கண்டதுண்டா ?
எப்பவும் போல
வர்ற பிறைதான்.
ஆனா
இது ரமழான் பிறை !
இதைப் பார்க்கத்தான்
எங்கள் மனசுக்குள் எத்தனை நிறை !
பண்டிகை நாளை ஆசையோடு எதிர்பார்த்திருக்கோம் !
வாப்பாவோ மகனோ
வெளிநாட்டிலிருந்து வரும் நாளை
எண்ணி எண்ணி எதிர் பார்த்திருக்கோம் !
கல்யாண மாப்பிள்ளையா
ஆகப்போற நாளுக்கு
ஆசைப்பட்டிருக்கோம் !
தாயாவோ
தகப்பனாகவோ
மாறப்போற நாளை எண்ணி
மகிழ்ந்திருந்திருக்கோம் !
அட
தேர்தல் முடிவைக்கூட
எதிர்பார்த்து
தூங்காமே முழிச்சிருக்கோம் !
ஆனா ...
ஒரு மாசம்
பட்டினியா கிடக்கப்போற நாளை
உற்சாகத்தோடு வரவேற்க
உலகத்தில்
எங்களைத் தவிற
வேறு யாராவது
ஆவலோடு காத்திருப்பாங்களா ?
அதுதாங்க முசல்மானின்
ஈமான் !
இறைவனுக்காக ..
உடல்
மனம்
சொல்
செயல்
எல்லாம்
சுத்தம் பேணும்
சத்தியவான்
இந்த முசல்மான் !
தன்னை எரித்து
இன்பம் காணும்
இறை நேசம் !
எரிவது சுகமா ?
எரிவதே சுகம் !
தன்னை
தான் என்ற எண்ணத்தை
தான் செய்த பாவத்தை
தான் சேர்த்த செல்வத்தை
எரித்து எரித்து
சுத்தம் செய்பவன்
முசல்மான் !
உண்ண உணவிருந்தும்
உண்ணாதவன் !
குடிக்க நீரும்
தொண்டை வரளும் தாகமும்
இருந்தும் குடிக்காதவன் !
உமிழ்நீரைக்கூட
உண்ணாதவன் !
கையருகே
கரம்பிடித்த
காதல் துணையிருந்தும்
இச்சையை
அச்சத்தால்
இறையச்சத்தால் வெல்பவன்
முசல்மான் !
ரமழான் என்ற
வசந்தத்தை
பூமிக்கு அனுப்பி விட்டு
ரய்யான் என்ற
சொர்க்கத்தை
நோன்பாளிகளுக்குத்
திறந்து வைக்கின்றானே
இணையற்ற இறைவன் ...
அவனையே
நாங்கள் வணங்குகின்றோம்
அவனுக்காகவே
நொன்பும் நோற்கின்றோம் !
இறைவா...
ரமழானின் அருள் போர்வையால்
எங்களைப் போர்த்து !
அதில்
சொர்க்கத்தின் வாசனை
கமழட்டும் !
@ நண்பர்கள் அனைவருக்கும்
இனிய ரமழான் வாழ்த்துக்கள் !
நன்றி Adhnul Thasneem

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval