Sunday, November 12, 2017

- இயற்கை மருத்துவம், நெய்வேலி நண்பரின் வாட்சப் பதிவு :

என்னுடைய வித்தியாசமான அனுபவத்தை இங்கு பகிர விரும்புகிறேன். கடந்த 3 நாட்களாக காய்ச்சல், கடுமையான ஜலதோஷம்,தொடர் இருமல்,தலைவலி என எல்லா கஷ்டமும் சேர்ந்து 2ம் தேதியிலிருந்து மிகவும் அவஸ்தை. சுரங்கம்  பணி பின் கோவில் பணி முடித்து இந்த இருமல் போராட்டம்
சுரங்கம் சிலிண்டர் பிரிவில் பணிபுரியும் நண்பர் நேற்று காலை என்னுடைய கஷ்டத்தை பார்த்து ஓரு சிறிய கை வைத்தியம் சொன்னார்.

இரண்டே இரண்டு ஏலக்காயை தோல் நீக்கி வாயில் போட்டு மென்றுவிட்டு 2நிமிடம் கழித்து கொஞ்சம் வெந்நீர் பருகுங்கள் என்று சொன்னார். 

ஆம். நானும் மனைவியும் இதை கடைப்பிடித்தோம். பெரிய அதிசயம். ஓரு முறை கூட இருமல் இல்லாமல் நிம்மதியாக தூங்கினேன்.
3 நாட்களின் அவதி cough syrup செலவு தேவையில்லை. 

சுரங்கம்  சிலிண்டர் பிரிவின் புதிய நண்பருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியையும் இந்த பதிவையும் காணிக்கை ஆக்குகிறேன். 

நமது பிரச்னைகள் பகிரப்படும் போது நல்ல நட்பின் வழி சுலபமான தீர்வு கிடைக்கின்றது. நண்பருக்கு நன்றிகள் பல. இந்த மழைக்காலத்தில் அனைவருக்கும் மிகவும் தேவை என்பதால் இந்த நீண்ட பதிவு. 
முடிந்தவரை அனைவருக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் காப்போம்.
நன்றி... 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval