Thursday, November 30, 2017

*அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல்துறையின் முக்கிய அறிவிப்பு*

Image may contain: 1 person, beard and closeup
புகைப்படத்தில் கண்டுள்ள நபர் இன்று (30.11.2017) காலை 08.00 மணியளவில் தென்காசி – அம்பாசமுத்திரம் செல்லும் பஸ்ஸில் வந்துள்ளார். அப்போது ஆழ்வார்குறிச்சி-பொட்டல்புதூர் மெயின்ரோட்டில் இசக்கியம்மன் கோயில் அருகே விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டிருந்துள்ளனர். இவர்களுக்கு உதவியாக பஸ்ஸில் வந்த மேற்படி புகைப்படத்தில் கண்ட நபரும் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியை செய்துள்ளார். இந்த பணியில் ஈடுபட்டபோது, இவருக்கு மரக்கிளை கண்ணில் குத்தி பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேற்படி நபருக்கு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு பின்பு, மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார். மேற்படி புகைப்படத்தில் கண்டுள்ள நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. அவரது சட்டை பையில் டிக்கெட் மற்றும் பணம் மட்டுமே இருந்துள்ளது. அவரைப் பற்றிய விலாசம் மற்றும் முகவரி எதுவும் தெரியவில்லை. அவரைப் பற்றிய முழு விபரம் யாருக்கேனும் தெரியவந்தால் உடனடியாக அம்பாசமுத்திரம் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தை அணுகி 04634283250 என்ற தொலைபேசி எண்ணிற்கோ அல்லது அம்பாசமுத்திரம் DSP அலுவலக தொலைபேசி எண்ணிற்கோ (04634 250400) உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 
*இவண்*
*காவல்துறை, அம்பாசமுத்திரம் உட்கோட்டம்.*
//உதவியவரை உரியவரிடம் ஒப்படைக்க உதவுங்கள்//
courtesy;facebook

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval