Monday, November 13, 2017

*நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்*

மனைவியை ஆற்றங்கரைக்கு அழைத்துச்சென்ற கணவர! 

 *நடந்தது என்ன?*

ஆற்றங்கரைக்குத் தன் மனைவியை அழைத்துப் போயிருந்தார் கணவர்

அவளிடம் ஒரு பையைக் கொடுத்தார்.
*பெரிய பெரிய கற்களைக்* காண்பித்தார்.

இந்தப் பையை அந்தக் *கற்களால்* நிரப்பு என்றார். 

மனைவி நிரப்பி எடுத்து வந்தாள்.

இதற்கு மேல் நிரப்ப முடியாது என்றாள்.

கணவர் கீழே கிடந்த *கூழாங்கற்களில்* சிலவற்றை எடுத்தார்.

அதே பையில் போட்டுக் குலுக்கினார்.

அவை பெரிய கற்களுக்கு நடுவில் இருந்த இடைவெளிகளில் உள்ளே இறங்கின.

ஒரு கட்டத்தில் மேற்கொண்டு கூழாங்கற்களைப் போட இடம் இல்லை.

இப்போதாவது நிரம்பிவிட்டதாக ஒப்புக் கொள்வீர்களா ?
” கேட்டாள் மனைவி.

கணவர் அங்கேயிருந்த *மணலை* அள்ளிப் பையில் போட்டார். 

பையை மேலும் குலுக்கினார்.

*கற்கள், கூழாங்கற்கள்* இவற்றுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் *மணல்* இறங்கியது. 

இதே பையை முதலில் மணலால் நிரப்பியிருந்தால்,
பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா ? 

என்று *கணவர்* கேட்டபோது இருந்திருக்காது என்று ஒப்புக் கொண்டாள் *மனைவி.*

வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய

1). *அன்பு,கருணை,*
*உடல்நலம்,மனநலம்,* போன்ற உன்னதமான விஷயங்கள், 
*பெரிய கற்கள் போன்றவை.*

2). *வேலை,வீடு,கார்,* போன்ற செல்வங்கள் *கூழாங்கற்களுக்குச் சமமானவை.*

3). *கேளிக்கை,வீண் அரட்டை* போன்ற அற்ப விஷயங்கள் இந்த *மணல் போன்றவை.*

*முதலில் பெரிய விஷயங்களுக்கு வாழ்க்கையில் இடம் கொடுங்கள்*

அதன் பின்னும் சின்ன சின்ன விஷயங்களுக்கு இடம் இருக்கும். 

ஆனால், 

உங்கள் வாழ்க்கையை அற்பமான விஷயங்களுக்காகச் செலவழித்துவிட்டால், 

👉முக்கியமான விஷயங்களுக்கு இடம் இருக்காது.
                          aj11-17-28
*நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்*

*நன்மைகள் நிலைத்தோங்கட்டும்*.
தகவல் ;சேக் அலி 
கலிபோர்னியா U.S.A

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval