Sunday, November 26, 2017

படித்ததில் பிடித்தது

Image may contain: 1 person, smiling, indoor
இவர் எங்கள் வீட்டுக்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கீரை சப்ளை செய்பவர். இன்று காலை 20 ரூபாய்க்கு கீரை வாங்கி விட்டு நூறு ரூபாய் கொடுத்தேன்.
சில்லரை இல்லையே பா என்றார்.
சரி வச்சிக்கோ பாட்டி அப்புறமா கீரையா வாங்கிக்கறேன் என்றேன்.
சரி என்று போனவர் ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்து பாக்கி 80 ரூபாயை கொடுத்து விட்டு நாளைக்கி இருப்பனோ மாட்டனோ பிடி காசை இவ்ளோ வெள்ளந்தியா இருக்காத ராசா உத்தியா குடும்பத்த பாரு என்று உபதேசம் செய்து விட்டு போனார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval