Tuesday, August 8, 2017

ரூ 26 லட்சத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த முஸ்லீம் மாணவன்

Image may contain: 1 person, text
ஹைதராபாத் வசித்து வரும் அப்துல் லத்தீப், கல்லூரி மாணவராகிய இவர்,நேற்று காலை தனது நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஓர் அரசு வங்கிக்கு சொந்தமான ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார்.
ஏடிஎம்மில் கார்டை செலுத்தியதும் கடவுச் சொல்லையும் அழுத்தி, அவருக்கு தேவையான ரூ 200 அழுத்தியுள்ளார்.
ஆனால் இயந்திரம் திடீரென திறந்துகொண்டு ரூ 26 லட்சம் பணத்தை போலபோலவென வெளியே தள்ளியுள்ளது
அந்த ஏடிஎம்மில் கேமராவும் இல்லை, செக்கியூரிட்டியும் இல்லை, என்பது. குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய நண்பனை அங்கேயே பணத்திற்கு பாதுகாப்பிற்கு நிற்க வைத்துவிட்டு அருகிலிருந்த காவல்நிலையத்திற்கு சென்று தகவல் கொடுத்துள்ளார்.
உடனடியாக காவல்துறை அதிகாரிகள் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
வங்கி அதிகாரிகளுக்கு ஒரே அதிர்ச்சி, அனைவரும் அங்கு வந்து பார்த்த போது 26 லட்சமும் அங்கேயே தான் இருந்துள்ளது.
அனைவரும், மாணவன் அப்துல் லத்தீபை கட்டி அணைத்து பாராட்டி உள்ளனர்.
பிறருடைய பொருளாதாரத்தை அநியாயமான முறையில் நாம் பயன்படுத்தினால் மறுமையில் இறைவனிடம் இதற்காக பதில் சொல்லியாக வேண்டும் என்ற நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் போதனைதான் இந்த முஸ்லிம் மாணவனின் நேர்மைக்கு அடித்தளமாக விளங்குகிறது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval