Tuesday, August 1, 2017

”நீங்க எப்படி அப்படி கேக்கலாம்” சென்னை இந்தியன் வங்கி பெண் அதிகாரியை விலாசிய நேர்மையான எஸ் ஐ – வீடியோ

சென்னை அமைந்கரை காவல் நிலையத்தில் எஸ் ஐ ஆக பணியாற்றுபவர் ராஜ்குமார், இவர் இன்று தனது சம்பள பணத்தை எடுக்க செனாய்நகர், புல்லா அவென்யூவில் உள்ள இந்திய வங்கிக்கு சென்றுள்ளார்.
அவரிடம் நீ ஒரு எஸ் ஐ தானே மினிமம் பேலன்ஸ் மெய்ட்டன் பன்ன மாட்டியா ? உன் இஷ்டத்துக்கு கார்ட தேய்ப்பியா என மற்ற வாடிக்கையாளர்களிடம் பேசுவது போன்று இந்திய வங்கி பெண் அதிகாரி பேசியுள்ளார்.
ராஜ்குமார் எஸ் ஐ அவர்கள் நேர்மையானவர் என பெயர் எடுத்தவர் யாரிடமும் கை நீட்டாதவர் எனக் கூறப்படுகின்றது தனது சம்பளத்தை வைத்தே தனது தேவைகளை நிவர்த்தி செய்து வருபவர் எனக் கூறப்படுகின்றது. முதல் தேதியில் சம்பள பணத்தை வங்கிக்கு வந்து எடுப்பதிலேயே இதை அறிந்து கொள்ள முடிகின்றது.
இந்நிலையில் தன்னிடம் தரக்குறைவாக பேசிய அதிகாரியிடம் அவர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். உங்க கிட்ட கேட்டு தான் நான் என் கார்ட தேய்க்கனுமா எஸ் ஐ என்றால் லஞ்சம் வாங்க வேண்டுமா எப்படி நீங்க அவ்வாறு கூறலாம் என கேட்க பெண் அதிகாரியிடம் பதில் இல்லை.
நம்மை ஏளனமாக பேசும் வங்கி அதிகாரிகளை யாரும் கேக்க மாட்டாங்களாா என ஏங்கிய இதை பார்த்த வாடிக்கையாளர்கள் எஸ் ஐ அவர்களை பாராட்டினர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval