Friday, August 11, 2017

சில உண்மைகள்

நம்மில் யாருமே 
75 (சராசரி ஆயுள்) ஆண்டுகளுக்கு மேல் உயிரோடு இருக்கப்போவதில்லை.
⚡போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை
⚡ஆகவே சிக்கனமாக
இருக்காதீர்கள்.
⚡செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள்.
⚡ மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.
⚡உங்களால் முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள்!
⚡எதற்கும் கவலைப் படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் நிறுத்த முடியுமா? 
வருவது வந்தே தீரும்!
⚡நாம் இறந்த பிறகு, நமது
உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப் படாதீர்கள்.
⚡அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுக்களோ அல்லது விமர்சனங்களோ
உங்களுக்குத் தெரியப் போவதில்லை.
⚡நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்த்து முடிவிற்கு வந்துவிடும்.
உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டுவிடும்.
⚡உங்களின் குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அவர்களின்
வாழ்க்கை அவர்களுக்கு விதித்த விதிப்படிதான் அமையும். 
அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை!
⚡ நாம் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் என்ன பெரிய பதவியில் இருந்தாலும் நமது மகன் / மகள் தலைவிதிப்படியே நடக்கும், நாம் ஒரு வழி காட்டியே
⚡சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். 
பணத்தைவிட உங்களின் ஆரோக்கியம் முக்கியம்.
⚡பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது!
⚡ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும், நாளொன்றிற்கு
அரை கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண முடியாது.
⚡அரண்மனையே என்றாலும் கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்க எட்டுக்கு எட்டு இடமே
போதும். ஆகவே ஓரளவு இருந்தால், இருப்பது போதுமென்று நிம்மதியாக இருங்கள்!
⚡ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கும். பிரச்சினை இல்லாத மனிதனைக் காட்டுங்கள் பார்க்கலாம்?
ஆகவே உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.
⚡பணம், புகழ்,
சமூக அந்தஸ்து என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
⚡யாரும் மாற மாட்டார்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள்.
அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும்.
⚡மன மகிழ்ச்சிதான் ஆரோக்கியத்திற்கு அடிப்படை !
உற்சாகத்தோடு இருப்பவர்களை நோய் நொடிகள் அண்டாது.
⚡நல்ல மனநிலை, உடற்பயிற்சி, சூரிய ஒளி, நல்ல உணவு, தேவையான விட்டமின்கள் - இவைகள் இன்னும் சில ஆண்டுகள் உங்களை
வாழவைக்கும்!!
⚡அதற்கு மேல் என்ன வேண்டும் - - -

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval