Thursday, August 10, 2017

-படித்ததில் சிரித்தது -

மனைவி; "என்னங்க உங்கம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்க்கப் போனீங்களே என்னாச்சு?"*
கணவன்;"அதெல்லாம் சேர்த்தாச்சு"
மனைவி ;"எங்கம்மா சொன்னது சரிதாங்க"
கணவர் ;"என்னா சொன்னாங்க"
மனைவி ;"நீங்க தங்கமானவங்கலாம். ஆம்பளனா உங்கள போலதான் இருக்கனும்பாங்க"?
கணவர்; "ஏனாம்?
மனைவி;"மனைவி சொல்ல தட்டாம கேட்கிறீங்கனுதா."
கணவர்;" சொல்ல மறந்துட்டேன். வயசான காலத்தில் பேச்சுத் துணைக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லாமல் அம்மா எப்படி இருப்பாங்கனு யோசனையா இருந்தேன்"
மனைவி ; "பேச்சு துணைக்கு ஆள் கிடைச்சுட்டாங்களா?"
கணவர்; "கிடைச்சுட்டாங்க"
மனைவி ; "அப்படியா யாரு?"
கணவர் ;"உங்கம்மா. இப்பத்தான் உன் அண்ணன் வந்து உங்கம்மாவை சேர்த்துட்டு போனான்"
மனைவி : என்னது?பொண்டாட்டி பேச்சை கேட்டு பெத்த அம்மாவை அனாதை ஆஸ்ரமத்தில் சேர்க்கிறவன் எல்லாம் ஒரு ஆம்பளயா?"
*உங்களுக்கு வந்தா ரத்தம்... எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா...!*

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval