Thursday, August 3, 2017

“வாப்பா வருவார்னு நம்பிக்கையா காத்திருக்கேன்!” - விமானத்தில் பிறந்த மகளின் சோகம்

ஆயிஷா - விமானத்தில் பிறந்த பெண்ஒரு விமானப் பயணத்தால் ஒரு பெண்ணின் வாழ்க்கையே மாறியிருக்கும் விஷயம் மனதை நெருடுகிறது! - சென்னை, காசிமேட்டைச் சேர்ந்த ஆயிஷாவின் வாழ்க்கை அத்தனை வேதனைகளையும் விமானத்தில் சுமந்து வந்திருக்கிறது..
அன்றைய நாள் அந்த விமானத்தில் பயணித்தவர்களுக்கு வெவ்வேறு விதமான கனவுகள் இருந்திருக்கும். அந்த விமானம் உயரே பறந்தது. திடீரென ஒரு பெண் அலறும் சத்தம். எல்லோரும் 'திக்'கென திரும்பிப் பார்க்க, பிரசவிக்கும் நிலையிலிருந்த ஒரு பெண் விமானத்தில் உருண்டு, புரண்டு அழுகிறார்.. கதறுகிறார். அனைவரும் பதற, அருகே இருந்த விமான நிலையத்துக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, உடனடியாக அங்கு விமானம் தரையிறக்கப்பட்டது. அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. சினிமா கதைபோல இருந்தாலும், இது 18 வருடத்துக்கு முன்பு குவைத்தில் நடந்த உண்மைச் சம்பவம் இது. . அந்தத் தாய்... ஃபாத்திமா பீவி.  அந்தக் குழந்தை... ஆயிஷா.  நம்மிடம் பேசினார் தாய் ஃபாத்திமா.
“என் கூடப்பிறந்தவங்க மொத்தம் மூணு தங்கச்சிங்க. சென்னை காசிமேடுலதான் என்னோட குடும்பம் இருக்கு. நான்தான் மூத்தவ. வாப்பாவுக்குத் கூலித் தொழில், வறுமை காரணமா ஒண்ணு, ரெண்டு வகுப்போட எங்க படிப்பெல்லாம் நின்னுப்போச்சு. குவைத்துல ஒரு வீட்டுல வேலை செய்ய என்னை, எங்கப்பா அனுப்பி வெச்சாரு.  20 வருஷங்களுக்கு முன்ன தன்னந்தனியா ஃப்ளைட்ல போனப்போ, ஃப்ளைட்லப் போற சந்தோஷத்தைவிட பயம்தான் அதிகமா இருந்துச்சு. உயிரைக் கையில பிடிச்சிக்கிட்டு போய் குவைத்ல இறங்கினேன். நான் வேலை செய்யப்போன வீட்டுக்காரர், ஏர்போர்ட்ஆபீஸர்ங்கிறதால ஃப்ளைட்டை விட்டு இறங்கினதும், ஒரு அதிகாரி என்னை கார்ல அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனாரு. அவர் வீட்டுக்குள்ள நுழையிறதுக்கு முன்னாடி அப்படியே அந்த வீட்டை வாய்மேல் கைவைத்து ஆச்சர்யமாப் பார்த்தேன். உண்மைய சொல்லணும்னா அது வீடில்ல அரண்மனை. நாலு டிரைவருங்க, நாலு சமையல்காரங்க, என்னையும் சேர்த்து அஞ்சு பொம்பளைங்க வீட்டு வேலைக்காக இருந்தோம். வேலை பார்க்கிறவங்களுக்கு எல்லாம் தனியா வீடு கொடுத்துட்டாங்க. அங்க ரொம்ப சௌகரியமான வேலை. நல்ல சம்பளம். வாப்பாவுக்கு மாச முதல் தேதியானா சம்பளப் பணம் அனுப்பிடுவேன். வீட்டோட ஞாபகம் வரும்போதெல்லாம், பக்கத்துக் கடைக்குப் போன் பண்ணி வாப்பாகிட்ட கொடுக்கச் சொல்லிப் பேசுவேன்...'' 
“எங்க முதலாளி அம்மாவுக்கு அப்பப்போ வந்து கேக் செஞ்சு கொடுக்கும் நஷீமா, எனக்குத் நெருங்கிய தோழி ஆனாங்க. அவங்களோட சகோதரர் அப்துல்லா, நான் வேலை பார்த்த வீட்டுலயே டிரைவரா சேர்ந்தாரு. எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதுங்கிறதால எங்க வீட்டுக்கு நான் சொல்லச் சொல்ல கடிதம் எழுதிக் கொடுத்த அவரு, என் கஷ்டத்தை எல்லாம் கேட்டு ஆறுதல் சொல்வாரு. ஒருநாள், ‘நாம நிக்காஹ் பண்ணிக்குவோம்’னு சொன்னாரு. எனக்கும் அவரைப் பிடிச்சிருந்தது. ‘என் வாப்பாக்கிட்ட லெட்டர் எழுதிக் கேளுங்க’னு சொன்னேன். எங்க வாப்பாவும், சம்மதிக்க, எங்க முதலாளி அய்யா மற்றும் அம்மாவே கல்யாணம் பண்ணி வெச்சாங்க. தனியா வீடு எடுத்துத் தங்கி வாழ ஆரம்பிச்சோம். நான் கர்ப்பமானேன்.'' என்றவரின் கண்கள் கலங்கியிருக்க சேலை முந்தானையில் கண்ணீரைத் துடைத்தபடி தொடர்கிறார்,
“அந்த நேரம் பார்த்து வாப்பா உடம்பு சரியில்லாம இறந்துட்டார். அதை என் கணவர் எங்கிட்ட மறைச்சுட்டார். ஒருகட்டத்துல எனக்கு உண்மை தெரிஞ்சப்போ, ‘நீ கர்ப்பமா இருக்கே... மனசு தாங்க மாட்டேனுதான் சொல்லல’னு சொன்னார். சில மாதங்களிலேயே எங்கம்மாவுக்கும் உடம்பு சரியில்லைனு போன் வந்துச்சு. ‘எனக்கு முக்கியமான வேலை இருக்கு. நீ இப்போ கிளம்பு, பின்னாடியே வந்துடுறேன்’னு ஃப்ளைட் ஏத்திவிட்டார். தன்னந்தனியா, ஆறரை மாச கர்ப்பிணியா ஏர்போர்ட்ல டெஸ்ட் எல்லாம் முடிச்சுட்டு, ஃப்ளைட் ஏறிட்டேன். குவைத்ல இருந்து கிளம்பின கொஞ்ச நேரத்துலயே வாந்தி வர ஆரம்பிச்சுடுச்சு. வலி கூடிட்டே போக... லேபர் பெயின்னு தெரிஞ்சவுடனே கன்ட்ரோல் ரூமுக்குச் சொல்லி, கத்தார் நாட்டு தலைநகர் தோஹாவுல ஃப்ளைட்டை இறக்கி, பக்கத்துல இருந்த ‘அமீர்’ மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போனாங்க. சுகப்பிரசவத்துல பெண் குழந்தை பிறந்துச்சு. என் கூட ரெண்டு ஏர்ஹோஸ்டஸை துணைக்கு விட்டுட்டு அந்த ஃப்ளைட் கிளம்பிப் போயிடுச்சு. குறைப்பிரசவம்ங்கிறதால குழந்தையை இன்குபேட்டர்ல 25 நாள் வெச்சிருந்தாங்க’’ என்கிறார் அந்த நாள் நினைவுகளை மீட்டியபடி.
அதற்குப் பிறகு நடந்ததுதான் இன்னும் ஃபாத்திமாவுக்கு மறக்க முடியாத புது அனுபவமாக இருந்தது. ஃபாத்திமாவின் மருத்துவமனைச் செலவுகள் முழுவதையும் ஏற்றுக்கொண்டது குவைத் ஏர்வேஸ். அவர் பாம்பே ஏர்போர்ட் வந்து இறங்கும் வரையிலான செலவுகளையும் ஏற்றுக்கொண்டது. மேலும், ஃபாத்திமாவின் குழந்தை, வாழ்நாள் முழுக்க குவைத் ஏர்வேஸில் இலவசமாகப் பயணிக்கலாம், குழந்தை வளர்ந்ததும் குவைத் ஏர்வேஸிலேயே வேலை தரப்படும் என்ற பரிசையும் தந்தது. ‘அமீர்’ மருத்துவமனை நிர்வாகம் குழந்தைக்குத் தேவையான பொருள்கள் மற்றும் ஃபாத்திமாவுக்கு ஆடைகள் பரிசளித்தது. செய்தித்தாள்களில் ஃபாத்திமா பற்றிய செய்தி வர, கத்தார் நாட்டு அரசுப் பிரதிநிதி நேரில் வந்து ஃபாத்திமாவையும், அவர் குழந்தையையும் நலம் விசாரித்துச் சென்றார். பிறக்கும்போதே இவ்வளவு புகழுடனும், பரிசுடனும் பிறந்த குழந்தைக்கு, அவர் அப்பா தந்த பரிசு... இதுவரை நேரில் பார்க்கவில்லை; இனியும் பார்ப்பாரா தெரியவில்லை என்பதுதான்.
‘‘நான் மருத்துவமனையில் இருந்தப்போ என் கணவருக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னேன். குழந்தைக்கு ‘ஆயிஷா’னு அவர்தான் பேர் வெச்சார். ஒருவழியாக பாதுகாப்பாக என்னை சென்னைக்கு அனுப்பி வச்சுட்டாங்க. சென்னைக்கு வந்து சேர்ந்தப் பிறகு மூணு மாசம் வரைக்கும் என் கணவர் போன்ல பேசிட்டு இருந்தார். அதுக்குப் பிறகு அவர்கிட்ட இருந்து எந்த போனும் வரல. என் கூட குவைத்ல வேலை பார்த்த நம்ம நாட்டுக்காரங்களும் திரும்பி வந்துட்டதால, அவரைப் பத்தின விவரத்தையும் யார்கிட்டயும் கேட்டுத் தெரிஞ்சுக்க முடியல. அவருக்கு லெட்டருக்கு மேல லெட்டர் அனுப்பினேன். ஒரு பதிலும் இல்ல. ஒவ்வொரு நாளும் அழுது அழுது கண்கள் வீங்கினதுதான் மிச்சம். பல ராத்திரி, 'இந்த குழந்தையை எப்படிக் காப்பாத்தப் போறேன்'ங்கிற வருத்தம் வாட்டுச்சு. அந்த சமயத்தில் எனக்கு சில பேர் ஆறுதலாக இருந்தாங்க. என் கணவர் குண்டுவெடிப்புல இறந்திருக்கலாம்னு சிலர் சொன்னாங்க. 
ஆனால், எனக்கு அத்தனை வேதனையிலும் ஏதோ ஒரு நம்பிக்கை இருந்துச்சு. எனக்காக இல்லனாலும், எங்க குழந்தைக்காகவாவது வருவாருனு காத்துட்டு இருந்தோம், 'அவருக்கு என்ன ஆச்சு, என்னை ஏமாத்திட்டாரா...  இல்லை, அவருக்கு எதிர்பாராதது எதுவும் நடந்திருச்சா..? இந்த ஆயுள் முடியுறதுக்குள்ள அவரைப் பார்க்க முடியுமா... தெரியல' இப்போவரைக்கும் எதுக்காக இப்படி காத்திருக்கிறோம்ங்கிற ஆற்றாமையும், வெறுமையும் வந்து வந்துப் போகுது.” என்றார்.
இப்போது ஃபாத்திமா வீட்டு வேலை செய்துகொண்டிருக்கிறார். மகள் ஆயிஷா, கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்து வருகிறார்.
அம்மாவை விட, மகளுக்கு இன்னும் அந்த ஏமாற்றம் நெஞ்சைத் தைத்திருக்கிறது. அவருடைய குரலில் அவ்வளவு கலக்கம்,
courtesy;vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval