Thursday, August 10, 2017

பராமரிக்க ஆள் இல்லாததால் மனமுடைந்து வயதான தம்பதியினர் தற்கொலை!


பராமரிக்க ஆள் இல்லாததால் மனமுடைந்து வயதான தம்பதியினர் தற்கொலை!திருப்பூரில் பராமரிக்க ஆள் இல்லாததால் மனமுடைந்து வயதான தம்பதியினர் விஷமருந்தி தற்கொலை கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த கணபதி மற்றும் அவரது மனைவி வள்ளியம்மாள் ஆகியோருக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி தனித்தனியே வசித்து வந்ததால் வயதான தம்பதியினரை கவனிக்க முடியவில்லை.

இதனிடையே வள்ளியம்மாளுக்கு காலில் காயம் ஏற்பட்ட நிலையில், 90 வயதான கணபதியால் அவரை பார்த்துக்கொள்ள முடியவில்லை. இதனால் மனமுடைந்த தம்பதியினர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். பெற்ற பிள்ளைகள் கவனித்துக் கொள்ளாததால் முதியவர்கள் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval