Saturday, March 3, 2018

மானிக் சர்காரை வீட்டுக்கு அனுப்பிய திரிபுரா மக்கள்! யார் இந்த மானிக் சர்கார் ?

Image may contain: 6 people, people smiling, people standing and outdoorமானிக் சர்காரை வீட்டுக்கு அனுப்பிய திரிபுரா மக்கள்! யார் இந்த மானிக் சர்கார் ?
> தொடர்ச்சியாக நீண்ட காலம் முதலமைச்சராக இருந்து ஒரு சில முதல்வர்களின் இவர் ஒருவர் (1998-2018)
> இந்தியாவில் சொந்த கார் சொந்த வீடு இல்லாத ஒரே முதல்வர்
> தனக்கு வரும் மாத சம்பளத்தை கட்சிக்கு நிதியாக அளித்து கட்சியிடமிருந்து வெறும் 10 ஆயிரம் ரூபாய் பெறுபவர்
> தனது வங்கி கணக்கில் வெறும் 2,410 ரூபாய் வைத்துள்ள ஒரே முதல்வர் (ஜனவரி 2018 படி)
> இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களில் மிகவும் ஏழ்மையானவர்
> சொந்தமாக மொபைல் போன் இல்லை
> மத்திய அரசு பணியில் இருந்த இவரது மனைவி அரசு காரை பயன்படுத்தியது இல்லை, வேலைக்கு ஆட்டோ அல்லது அரசு போக்குவரத்தை பயன்படுத்தும் வழக்கம் உடையவர்
> இவருக்கு குழந்தைகள் இல்லை!
> வாழும் காமராஜர் என்ற பலரால் அழைக்கப்படும் நபர்.
20 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதல்வராக இருந்த அவரை இன்று அம்மாநில மக்கள் 45 சதவிகித ஓட்டுக்கள் கொடுத்து வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.
20 ஆண்டு ஆட்சி செய்த பிறகும், வென்று விட வேண்டும் என்ற மத்திய அரசின் தீவிர யுக்திகளை தாண்டியும் கிட்ட தட்ட 50 சதவிகித மக்களின் நம்பிக்கையை இன்றும் தக்க வைத்துள்ளார் மானிக் சர்கார்!

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval