Saturday, March 24, 2018

கரூர் பெண்ணிடம் தாலி செயினை பறித்த வாலிபர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி செயினை மீட்ட பெண்

கரூர் மாவட்டம் காந்தி கிராமம் ஜெஜெ கார்டனை சேர்ந்தவர் லதா (30). இவரது கணவரின் பெயர் ரகுபதி. நேற்று வெள்ளிக்கிழமை லதா வீட்டில் தனியாக இருந்த போது 2 வாலிபர்கள் வீடடிற்குள் புகுந்து லதா அணிந்திருந்த 7 சவரன் தாலி செயினை பறித்து சென்றுள்ளனர்.
லதா துணிச்சலாக செயல்பட்டு அந்த இரு வாலிபர்களை துரத்தி சென்றுள்ளார். பினனர் லதா சத்தம் போடவும் அக்கம் பக்கத்தினர் வந்து அந்த இருவருரையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
ஆரம்பத்தில் தான் ஏதும் செய்யவில்லை எனக் கூறியவன், தர்ம அடி வாங்கியதும் லதாவின் கழுத்தில் இருந்து பறித்த 7 சவரன் தாலி செயினை லதாவின் கையில் வீசுகிறான்.
”வெள்ளிகிழமை அதுவுமா என் தாலியவாடா பறிக்கிறீங்க” என லதா துணிச்சலாக பேசுகின்றார்.
பின்னர் இருவரையும் பொதுமக்கள் பசுபதி பாளையம் போலிசில் ஒப்படைத்தனர். விசாரனையில் திருட்டில் ஈடுபட 3 பேர் வந்தது தெரியவந்துள்ளது.
3 பேரில் ஒருவன் தப்பித்துள்ளான். போலிசார் பொதுமக்கள் பிடித்த இருவரை கைது செய்துள்ளனர்.


துணிச்சலாக செயல்பட்ட லதாவையும் இளைஞர்களையும் அப்பகுதியினர் பாராட்டினர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval