Saturday, March 10, 2018

நன்றி தலைமைக் காவலர் மகேஸ்வரன்

Image may contain: 2 people, people sitting and outdoor
நேற்றுக் கோவையில், வேலைத் தேடி அலைந்த தியாகராஜன் என்ற இளைஞர் மிகுந்த களைப்பால் மயக்கம் அடைந்து விழுந்திருக்கிறார் !
அருகில் போக்குவரத்துப் பணியில் இருந்த தலைமைக் காவலர் மகேஸ்வரன் ஓடி வந்து தியாகராஜன் முகத்தில் தண்ணீர் தெளித்து முதலுதவி செய்து ஆம்புலன்ஸ்க்கு போஃன் செய்திருக்கிறார்
!
மயக்கம் தெளிந்து கண் விழித்த இளைஞர் தியாகராஜன் என்பவர் , " வேண்டாம் சார் காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடவில்லை , பசியால் தான் மயக்கம் ஒரு சாக்லேட் மட்டும் வாங்கி தாருங்கள் போதும் " என்றவுடன் ,
போக்குவரத்துத் தலைமைக் காவலர் மகேஸ்வரன் அந்த இளைஞருக்கு உடனே ஓடிப்போய் சாப்பாடு வாங்கிக் கொடுத்துச் சாப்பிட வைத்து , தனது நண்பர்கள் மூலமாக வேலைக்கு ஏற்பாடு செய்வதாக ஆறுதல் சொல்லி அனுப்பியுள்ளார் !
கொளுத்தும் வெயிலில் போக்குவரத்துப் பணி செய்தாலும் , பிறர் கஷ்டம் கண்டு முதலில் ஓடி வருவது காவல்துறையினராக மட்டுமே இருக்கும் !
நன்றி தலைமைக் காவலர் மகேஸ்வரன் @ Rakki Mahesh !
தமிழகக் காவல்துறை உங்களால் பெருமையடைகிறது ! வாழ்த்துக்கள் !
தகவல் தம்பி Venganur Rajendiran !






No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval