Monday, March 5, 2018

போதையில் ? கார் ஓட்டிய பிரபல டிவி தொகுப்பாளினி அட்டகாசம் மடக்கி பிடித்த இளைஞர்கள்


சென்னை பாரிமுனையில் மண்ணடி அருகே நேற்று இரவு சிறுவனுடன் ஒருவர் காரில் வந்துள்ளார். சிக்னலில் நின்ற அவரை பின் பக்கமாக வந்த கார் ஒன்று இடித்துவிட்டு ஓவர்டேக் செய்து சென்றுள்ளது.
யார் என பார்க்க சிறுவனுடன் காரை விட்டு இறங்கிய அவர் இடித்தவர்களை கேள்வி கேட்டுள்ளார். காரில் இரண்டு பெண்கள் இருந்துள்ளனர். அவர்கள போதையில் இருந்ததாக கூறப்படுகின்றது. வருத்தம் தெரிவிப்பதற்கு பதிலாக திமிராக பேசி நாங்கள் மீடியா எனக் கூறியதோடு சிறுவனை F என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகின்றது.
இவரை மட்டுமின்றி பலரை இடிப்பது போன்று வேகமாக கார் ஓட்டி வந்ததாகவும் கூறப்படுகின்றது.
இதை பார்த்த இளைஞர்கள் அந்த காரை மடக்கியுள்ளனர். காரின் முன் ஆட்கள் இருக்கின்றார்கள் என்பத தெரிந்தும் அந்த பெண்கள் காரை ஆண் செய்து எடுக்க முயல்கின்றனர். இருப்பினும் இளைஞர்கள் கார் செல்ல அனுமதிக்கவில்லை.
காரில் இருப்பது யார் என பார்க்கும் போது தான் தெரியவருகின்றது. அதில் இருப்பது பிரபல டிவி யின் தொகுப்பாளினி நிவேதிதா என்பது (சன் மியுசிக்).



குடிபோதையில் வந்திருப்பதை பரிசோதிக்க வேண்டும் என அங்கிருந்த இளைஞர்கள் கூறியுள்ளனர். எனினும் அந்த இரண்டு பெண்களும் காரை விட்டு இறங்கவில்லை.
அங்கிருந்தவர்களையும் அந்த பெண்கள் திட்டியதாக கூறப்படுகின்றது. இறுதியில் போலிசார் காரை பறிமுதல் செய்து அந்த பெண்களை அழைத்து சென்றனர்.
நிவேதிதா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பொண்ணுங்க அட்டகாசம் பன்னா யாரும் கேக்கக் கூடாது அப்படியே விட்ரனுமா என அங்கிருந்த இளைஞர்கள் கோஷமிட்டனர்.
பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் போது பையில் இருந்த கண்ணாடியை எடுத்து ஸ்டைலாக போடுவதும், அங்கிருந்தவர்களை மேலும் கடுப்பேற்றும் விதமாக சிரிப்பதுமாக அந்த பெண்கள் இருந்தனர்.
courtesy;சற்றுமுன் 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval