Wednesday, March 28, 2018

வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்தவர்களை காமடி பீசாக்கிய துணிச்சல் இளைஞர்கள் கூடுவாஞ்சேரி


வீட்டில் கொள்ளை அடிக்க புகுந்தவர்களை சினிமா பாணியில் இளைஞர்கள் உள்ளே வைத்து பூட்டி பின்னர் கொள்ளையர்கள் கெஞ்சிய சம்பவம் காஞ்சிபுரம் கூடுவாஞ்சேரி அருகே நீலமங்கலத்தில் நடைபெற்றுள்ளது.
சினிவாசன் என்பவர் ஆடிட்டர். இவர் கடந்த திங்கள் கிழமை அன்று குடும்பத்துடன் டெல்லிக்கு சென்றுள்ளார். செல்லும் போதே வீட்ல யாரும் இல்ல வீட்ட பாத்துக் கோங்க என அக்கம் பக்கத்தினரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
சீனிவாசன் வீட்டில் இல்லாதை அறிந்த கொள்ளையர்கள் நேற்று அவரது வீட்டிற்குள் புகுந்துள்ளனர். சாவகாசமாக டிவியை ஆன் செய்து பார்த்துக் கொண்டே கொள்ளை அடித்துள்ளனர்.
பிரோவை உடைக்க இருட்டாக இருந்ததால் வீட்டில் இருந்து லைட்டை போட்டுள்ளனர். லைட்டை போட்டுக் கொண்டு டிவியை பார்த்துக் கொண்டு ஜாலியாக பீரோவை உடைத்துக் கொண்டிருந்துள்ளனர்.
சீனிவாசன் வீட்டில் திடீர் என லைட்டு எரிகிறதே அவர் ஊரில் இல்லையே என சந்தேகப்பட்ட அக்கம் பக்கத்தினர். அங்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது கொள்ளையர்கள் இருவர் சாவகாசமாக டிவியை பாாத்துக் கொண்டு பிரோவை உடைத்துக் கொண்டிருப்பதை அறிந்து வீட்டின் கதவை வெளியே வைத்து பூட்டினர்.
பின்னர் போலிசற்கு தகவல் கொடுத்தனர். போலிசார் வந்ததும் வெளிய வா எனக் கூறுகின்றனர். ”இல்ல இல்ல நாங்க நாங்க வெளிய வந்தா எங்கள போட்டு போலந்துடுவாங்க எனக்கு ஃபிக்ஸ்” வந்துரும் ஏற்கனவே 35 தையல் போட்ருக்கு” என கொள்ளையர்கள் கெஞ்ச ஆரம்பித்துவிட்டனர்.
பொதுமக்களுக்கு பயந்து நீண்ட நேரமாக அவர்கள் வெளியே வரவில்லை. பின்னர் போலிசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அடிக்காம பாத்துகிறோம் என கூறி பயந்து நடுங்கிய அவர்களை ஒரு வழியாக வெளியே வர வைத்தனர்.
”சார் யாரையும் அடக்க வேனாம்னு சொல்லுங்க சார்” என அதில் ஒருவர் கெஞ்சுகிறான்.
கையில் பேட் மற்றும் ஸ்டெம்ப் உடன் காத்திருந்த இளைஞர்கள் சந்தர்ப்பம் கிடைத்ததும் கொள்ளையர்களை போட்டு போலந்தனர்.

திருட வந்த கொள்ளையர்களை காமடி பீசாக்கி இளைஞர்கள் நடத்திய இந்த துணிச்சலான செயலை பொலிசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval