Monday, July 13, 2015

நல்லோரையும், நல்ல விஷயங்களையும் ஞாபகம் செய்வோம்.....

சமீபத்தில் இறந்து போன சவுதி அரபிய மன்னர் அப்துல்லாஹ் அவர்களிடம் ஓரு புகார் செய்யப்பட்டதாம்...
*
"முஸ்லீமல்லாத பிற மதத்துக்காரர்கள் தொழுகை நேரத்தில் தெருக்களில் நின்று கொண்டு இடஞ்சல் தருகிறார்கள். இதற்கு தங்களின் ஆலோசனைப்படி புதிய சட்டம் கொண்டு வந்தால் நல்லது".
*
இது தான் புகார்...

**
இதற்கு மன்னர் அப்துல்லாஹ்வின் பதில்:-
*
"யார் மீதும் எந்த நிர்பந்தமும் இல்லை என்பது தான் குர்ஆனின் சொல். அதற்கேற்ப எனது நாட்டில் வாழ, உழைக்க வந்த மக்களை பிரித்து பார்க்காதீர்கள். அவர்கள் எந்த மதத்தை, எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் சரி.
*
அவர்கள் நமது விருந்தாளிகள் அவர்களை மதிப்பது தான், இறைவனுக்கு நாம் செய்யும் பணி விடை.
*
இனி இது போன்ற புகார்களை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டுமென உங்கள் யாவரையும் கேட்டுக் கொள்வதோடு, யாவரையும் மதிப்பதையும், தொழுகச் செல்வோருக்கு தேவையான, முறையான உதவிகளை செய்வதையும் உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்" என்றாராம்.
*
இதுவே மனிதம்..........
*
இவர் நமது இந்தியா வந்த போது, "இந்த இந்திய மண் எனக்கு இரண்டாவது தாய் வீடு" என்று சொன்னார்.
*
*
நல்லோரையும், நல்ல விஷயங்களையும் ஞாபகம் செய்வோம்.....
*
இதை இன்றைய இந்தியாவின் ஆட்சியாளர்களுக்கு சமர்பிக்கின்றோம்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval