Tuesday, July 14, 2015

டாக்டராக நடித்து பிரசவித்த பெண்ணை நிர்வாணமாக படம் பிடித்த வாலிபர் கைது !

டாக்டராக நடித்து பிரசவித்த பெண்ணை நிர்வாணமாக படம் பிடித்த வாலிபர் கைது
ஐதராபாத், ஜூலை 12-

விஜயவாடா மாவட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணை நிர்வாணமாக போட்டோ எடுக்க முயன்ற வாலிபரை பிடித்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜயவாடா மாவட்டத்தில் உள்ள மைலாவரம் பகுதியை சேர்ந்த ஒரு பெண் பிரசவத்திற்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிசேரியன் ஆபரேஷன் மூலம் குழந்தை பெற்ற அந்த பெண் சிகிச்சைக்காக அங்கு தங்கியிருந்தார்.

இந்நிலையில், அவர் தங்கியிருந்த வார்டுக்கு இன்று காலை வந்த ஒரு வாலிபர், உதவி டாக்டராக நடித்து அந்த பெண்ணின் ஆடைகளை களைந்ததுடன் அவரது நிர்வாணத்தை தனது செல்போனால் புகைப்படம் எடுத்தார். அப்போது அந்த வார்டுக்குள் நுழைந்த நர்ஸ் இதை கண்டு அதிர்ச்சியந்தார்.

அந்த நர்ஸ் போட்ட கூச்சலையடுத்து ஓடிவந்த பொதுமக்கள் மற்றும் அந்த பெண்ணிற்கு துணையாக அருகாமையில் இருந்த உறவினர்கள் அந்த வலிபரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி மாலை மலர்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval