Thursday, July 23, 2015

மருந்து மாத்திரைகளை மறந்து வந்த பயணிக்காக விமானத்தை மீண்டும் தரை இறக்கி மனித நேயத்திற்கு புதிய வரலாற்றை எழுதிய முஸ்லிம் விமானி யூசுப் சேர்.!!

சவுதி அரேபியாவின் ஹயில் நகர விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்றை புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானி யூசுப் சேர் தரை இறக்கினார்

விமானத்தில் பயணம் செய்த 17 வயது இளைஞர் ஒருவர் புற்று நோயால் பாதிக்க
ப்பட்டவர்.

அவர் உட்கொள்ள வேண்டிய மருந்து மாத்திரைகளை மறதியாக ஹயில் நகரில் விட்டு வந்து விட்டதாலும் அவர் குறிப்பிட்ட நேரத்தில் அந்த மருந்துகளை உட் கொள்ளவில்லை என்றால் அவரது உயிருக்கே அபாயம் இருப்பதாக விமானி யூசுப் சேர்க்கு சொல்ல
ப்பட்டதும் அவர் சிறிதும் யோசிக்காமால் உடனடியாக விமானத்தை புறபட்ட இடத்திற்கே திருப்பி கொண்டுவந்து தரை இறக்கினார்

இதன் மூலம் ஒரு உயிரை காப்பாற்றுவத
ற்கு அவர் உதவியுள்ளார்

இதனால் 50 நிமிடங்கள் விமான பயணம் தாமதமானாலும் பயணிகள் அனைவர்களும் அதை இன்முகத்தோடு ஏற்று கொண்டனர்

50 நிமிடங்களை விட ஒரு உயிரை காப்பாற்றுவது முக்கியம் என்றும் அத
ற்காக தாங்கள் மகிழ்வதாகவும் விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவர்களும் கருத்து தெரிவித்தனர்

இத
ற்கிடையே விமானி யூசுப் சேர் அவர்களின் மனித நேய பணியை பாராட்டி இது போன்ற பணிகளை ஊக்குவிப்பதற்காக அவருக்கு பாராட்டு பத்திரமும் ஊக்க தொகையும் வழங்கி அவரை கௌரவிக்க போவதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது. 

 source : VKR BUSHRA

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval