Tuesday, July 14, 2015

உண்மையான நேர்மையான ஹீரோக்கள்

திரு.சுதாகர் IPS ( புளியந்தோப்பு DCP) அவர்களது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இரயில் பயணிகள் போல் வேடமிட்டு 
மிகுந்த சிரமங்களைக் கடந்து சிறுவனைக் கடத்திய இளைஞனைப் பிடித்தனர்.
இந்தத் தனிப்படையில் திரு.ஜெயக்குமார் DCP ( Crime Branch) அவர்களும் திரு.மயில்வாகனன் DCP ( அம்பத்தூர்) அவர்களும் அடங்குவர்.
ஒரு திரைப்படம் வெளியானதும் ஊடகங்களும் பத்திரிக்கைகளும் அதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இது போன்றவற்றிற்கு கொடுப்பதில்லை.
இனியாவது சினிமா ஹீரோக்களை விடுத்து இவர்களைப் போன்ற உண்மையான நேர்மையான வீரர்களைக் கொண்டாடுவோம்.
ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள்வோம்.காவலர்கள் இல்லையெனில் நாம் கட்டியிருக்கும் கோவணத்தைக் கூட காப்பாற்றிக் கொள்ள இயலாது நம்மால்..

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval