Tuesday, July 14, 2015

சந்தோஷம் என்பது

சந்தோஷம் என்பது காசு கொடுத்து வாங்கும் பொருளல்ல .
இருப்பதைக்கொண்டு நிறைவாய் வாழ மனதை பக்குவப்படுத்திக் கொள்வது!
அது ஒவ்வொருவர் மனம் சார்ந்த விஷயமே!
நம்மை சுற்றி என்ன உள்ளதோ ,
நமக்கு என்ன கிடைக்கிறதோ அதையே தமக்கு கிடைத்தது ஒப்பற்றது என மனதை நினைக்கும்படி செய்தாலே போதும் ,
சந்தோஷம் நம்மை தேடி வரும்.
நம்மிடம் உள்ளதை பற்றி மட்டுமே பேசினால் போதும்.
அடுத்தவர்கள் குறையாக சொல்வதை நம் மனதிற்கு கொண்டு செல்லாமலிருங்கள் .
நீங்களும் மகிழ்ச்சியாக இருக்கலாம் .
இந்த நடிகரின் மனைவி தன் கணவர் மற்றும் குழந்தையுடன் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார் பாருங்கள்.
இந்த நடிகர் தனது குறை என்று மற்றவர்கள் சொல்வதையே மூலதனமாக கொண்டு சம்பாதிக்கிறார்.
குறையை பற்றி மட்டும் சிந்திக்காமல்
நிறையை மட்டும் சிந்தியுங்கள்,
சந்தோஷம் நம்மிடமே தங்கி விடும்!

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval