Saturday, July 18, 2015

பாரசீகம் (ஈரான்) இஸ்லாமிய உலகுக்கு வழங்கிய அருட்கொடைகள்.


அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கின்றார்கள்: நாம் ஒருமுறை ரசூலுல்லாஹ்வுடன் (ஸல்) அமர்ந்திருந்த சமயம் அன்னாருக்கு சூரா ஜும்'ஆ அருளப்பட்டது. அதில் " இன்னும் இணையாதிருப்பவர்களுக்கு" என்ற வசனம் எமக்கு ஓதிக் காண்பித்த போது நான் "யார் அவர்கள்" என்று இரண்டு, மூன்று முறை வினவினேன். சிறிது நேரம் பதில் சொல்லாதிருந்த ரசூலுல்லாஹ் (ஸல்), பிறகு, எம் மத்தியில் இருந்த சல்மான் பாரிஸி (ரழி) மீது தம் கரத்தை வைத்து "இவரின் சந்ததியில் இருந்து ஒருவரோ அல்லது சிலரோ, விசுவாசம் (ஈமான்) துறையா என்ற நட்சத்திரத்தின் அருகில் இருப்பினும் அதனை அடைந்து கொள்வர்" என்று குறிப்பிட்டார்கள்.
ஆதாரம்: புஹாரி 6:60:240 (இதே ஹதீஸ் முஸ்லிமிலும் பதியப்பட்டுள்ளது).
பாரசீகம் (ஈரான்) இஸ்லாமிய உலகுக்கு வழங்கிய அருட்கொடைகள்
சல்மான் அல்-பாரிஸி (ரழி) (நபித் தோழர்)
இமாம் புஹாரி (ரஹ்)
இமாம் முஸ்லிம் (ரஹ்)
இமாம் திர்மிதி (ரஹ்)
இமாம் இப்னு மாஜா (ரஹ்)
இமாம் நஸாயி (ரஹ்)
இமாம் அபூ தாவூத் (ரஹ்)
இமாம் அபூ ஹனீபா (ரஹ்) (ஹனபி மத்ஹபின் இமாம் - பாரசீக வழித்தோன்றல்)
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) (ஹன்பலி மத்ஹபின் இமாம் - பாரசீக வழித்தோன்றல்)
இமாம் அபூ அப்துல்லாஹ் அல் ஹாகிம் (முஹத்திதீன்களின் இமாம் என்று அழைக்கப்படுபவர்)
பைஹக்கி (புகழ் பெற்ற சரித்திராசிரியர்)
அத்-தபரி (புகழ் பெற்ற சரித்திராசிரியர்)
பலாஸுரி (புகழ் பெற்ற சரித்திராசிரியர்)
பக்ருத்தீன் அர்-ராஸி (மருத்துவம், இயற்பியல், வானியல், இலக்கியம், வரலாறு மற்றும் சட்டம்)
அல்-பிரூனி (வானியல் மற்றும் கணித மேதை)
அலி இப்னு சீனா (தத்துவ ஞானி, மருத்துவர்)
இமாம் கஸ்ஸாலி (ரஹ்) (தத்துவ ஞானி)
ஷஹாப் அத்தீன் ஷுஹ்ரவர்த்தி (சூபி தத்துவ ஞானி)
முஹியுத்தீன் அப்துல் காதர் ஜெய்லானி (சூபி தத்துவ ஞானி)
பஹா உத்தீன் நக்ஷபந்த் (சூபி தத்துவ ஞானி, நக்ஷபந்த் தரீக்கா ஸ்தாபகர்)
அல்-பராபி (தத்துவ ஞானி)
க்வாறிஸ்மி (அல்கோரிதம் மற்றும் அல்ஜிப்ரா, கணித சாஸ்திரியும் வானியல்)
சிபாவைஹ் (அரபு மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்)
இப்னு ஹைதம் (புகழ் பெற்ற மருத்துவர்)
ஜாபிர் இப்னு ஹையான் (வேதியியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர்)
ஜமாலுத்தீன் ஆப்கானி (இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்)
ஜலாலுத்தீன் ரூமி (உலகப் பிரசித்திப்பெற்ற கவிஞர், தத்துவ ஞானி)
பிர்தௌசி ஸி (உலகப் பிரசித்திப்பெற்ற கவிஞர்)
உமர் கையாம் (உலகப் பிரசித்திப்பெற்ற கவிஞர்)
ரசூலுல்லாஹ் (ஸல்) கூறியதாக தவ்பான் (ரலி) பின்வருமாறு அறிவிக்கின்றார்கள்:
கருப்பு பதாதைகளை ஏந்தியவாறு கொராஸானில் இருந்து ஒரு படை வருவதைக் கண்டால், பனியின் மீது தவழ்ந்து செல்ல நேரிட்டாலும், உடனடியாக அதனுடன் இணைந்து கொள்ளுங்கள். ஏனெனில், நிச்சயமாக, அவர்கள் மத்தியில் மஹ்தி இருப்பார்.
(இப்னு மாஜா, அஹ்மத், அல்-ஹாகிம்)

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval