Saturday, May 21, 2016

தேமுதிக- ம.ந.கூ மக்கள் நலனுக்காக இணைந்து பணியாற்றும்: வைகோ பேட்டி


சென்னை: சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் ம.ந.கூ தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக் கூட்டத்தில் விஜயகாந்த், வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன், முத்தரசன், ஜி.கே வாசன் பங்கேற்றனர். 

தேர்தல் தோல்வி குறித்து தேமுதிக- ம.ந.கூட்டணி தலைவர்கள் சென்னையில் ஆலோசனை நடத்தினர். தேமுதிக- ம.ந.கூ மக்கள் நலனுக்காக இணைந்து பணியாற்றும் என்றும் ஆலோசனைக்குப் பிறகு ம.ந.கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ பேட்டி அளித்துள்ளார். 
courtesy;Dinakaran

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval