Tuesday, January 2, 2018

மீனிமம் பேலன்ஸ் வைக்கவில்லை

Image may contain: 3 people, people standing, crowd and outdoor
மீனிமம் பேலன்ஸ் வைக்கவில்லை எனக் கூறி ஓராண்டில் எஸ்பிஐ வங்கி 1771 கோடி ரூபாய் வாடிக்கையாளர்களிடமிருந்து வசூல் செய்துள்ளது!
5 ஆயிரத்திற்கும் குறைவாக யார் வங்கி கணக்கு வைத்திருப்பார்கள் ? மேல் தட்டு மக்களா , நடுத்தட்டு மக்களா ? அப்பாவி ஏழை மக்கள் தான் வைத்திருப்பார்கள். அன்றாடம் கூலி வேலை செய்து உழைக்கும் இவர்களது காசை பிடுங்கி யாரை வாழ வைக்க போகின்றீர்கள் இதான் புதிய இந்தியாவா என்ற கருத்தில் இது குறித்து பிரபல எழுத்தாளர் சமூக ஆர்வலர் முத்து கிருஷ்ணனின் பதிவு பின் வருமாறு!
---
State Bank of India வங்கி தனது வாடிக்கையாளர்கள் தங்களின் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகையான ரூ.5000/- வைக்கவில்லை என்பதற்காக நவம்பர் 2017 வரை வசூலித்த அபராதத் தொகை ரூ.1771 கோடிகள்.
SBI வங்கியின் ஜூலை- செப்டம்பர் 2017 காலாண்டு லாபம் ரூ.1,581 கோடிகள் என்பதை நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன். கார்பரேட்டு நட்டங்களை சரி செய்ய ஒரே வழி சாமானியனின் கோவனத்தை உருவியெடுப்பது தான்.
முத்து கிருஷ்ணன்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval