Saturday, January 6, 2018

வயதான பெற்றோரை பேருந்து நிறுத்தத்தில் தங்கவைத்த மகள்!


Imageகர்நாடகாவில், வயதான பெற்றோரை, ஹூப்லி பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் கட்டாயப்படுத்தி தங்க வைத்த மகளின் செயல், அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

90 வயது மதிக்கத்தக்க சூரியகாந்த் மற்றும் 80 வயது மதிக்கத்தக்க கமலா ஆகியோர் ஹூப்லி பேருந்து நிறுத்தம் 2 நாட்களாக தங்கியுள்ளனர். அவர்களது துயரத்தை அங்கு வந்த பயணிகள், போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களிடம் பகிர்ந்துள்ளனர்.

இதனையடுத்து, அவர்களை அருகில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்க்க முடிவு செய்த அப்பகுதியினர், அங்கு அழைத்துச்சென்றனர். ஆனால், அடையாள அட்டை இல்லாத காரணத்தினால், அங்கு அனுமதிக்க நிர்வாகத்தினர் மறுத்துவிட்டனர்.

மேலும் அந்த தம்பதியர், லன்க்‌ஷ்மேஷ்வரா பகுதியிலிருந்து வந்திருப்பவர்கள் என்றும், அவர்களது மகளால் அவர்கள் கைவிடப்பட்டவர்கள் என்றும் சில நாட்கள், அவர்கள் ஹூப்லி கோவிலில் பணியாற்றினார்கள் என்றும் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

வயதானகாலத்தில் அவர்களது மகளது வீட்டில் தங்கலாம் என்று வந்த பெற்றோரின் நிலை தற்பொழுது கேள்விக்குறியாக உள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval