Tuesday, January 30, 2018

சினிமா பாணியில் தனது கணவரின் கொலைக்கு பலி

காரைக்கால்: ராமு இவருக்கு வினோதா இளவரசி என்ற இரண்டு மனைவிகள். இரண்டு மனைவியுடன் வாழ்ந்து வந்த ராமு ஒரு நாள் முதல் மனைவியை விட்டு பிரிந்து 2 வது மனைவி இளவரசியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இளவரசி ராமு ஒன்றாக காரில் செல்லும் போது ராமு கொல்லப்படுகின்றார் இளவரசி தப்பித்து விடுகின்றார்.
ராமு சாராய வியாபாரி என்றும் இளவரசி பெண் தாதா எனவும் கூறப்படுகின்றது. தனது கணவரை முதல் மனைவி தான் கொலை செய்திருப்பார் என்று எண்ணிய இளவரசி அனைவரையும் தீர்த்தகட்டி பலி வாங்க முடிவு செய்து முதல் மனைவி, புதுவை முன்னால் சபாநாயகர் உள்ளிட்ட 3 பேரை
ஒருவர் பின் ஒருவராக கொலை செய்துள்ளார்.
4 வது நபரை கொலை செய்ய திட்டமிட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார். இதில் குறிப்பிட வேண்டிய விசயம் என்னவெனில். 3 பேரை கொலை செய்து விட்டு போலிசில் சரண் அடைந்த இளவரசி ஜாமனில் வெளியே வந்து போலிசின் கண்ணில் மண்ணை தூவி தலைமறைவாகி 4 வது கொலை செய்ய திட்டமிட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார்.
5 நட்சத்திர ஹோட்டலில் தனது 13 ஆண் கூட்டாலிகளுடன் திட்டம் திட்டிக் கொண்டிருந்த போது போலிசார் இளவரசியையும் அவருடன் இருந்த 13 பேரையும் கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval