Friday, January 5, 2018

பெற்ற தாயை கொலை செய்து விட்டு நாடகமாடிய மகன் 3 மாதம் கழித்து காட்டி கொடுத்த சிசிடிவி

தனது 64 வயது தாயை பேராசிரியர் பணியாற்றும் மகனே கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகமாடி அனைவரையும் நம்ப வைத்தது 3 மாதம் கழித்து சிசிடிவி மூலம் அம்பலமாகியுள்ளது.
நடக்க முடியாத தாயை மொட்டை மாடிக்கு படிக்கட்டில் தூக்கி சென்று மேலிருந்து தள்ளிவிட்டு பின்னர் வீட்டிற்குள் வந்து கதவை சாத்தி கொள்கின்றான்.
சிறுது நேரம் கழித்து கீழ் வீட்டில் இருக்கும் ஒருவர் உன் தாய் மேலிருந்து கீழே விழுந்து விட்டார் எனக் கூற மகன் எதுவுமே தெரியாதது போன்று கீழே செல்கினறார். அவருடன் மனைவியும் செல்கின்றார்.
இது கொலை அல்ல தற்கொலை என ஒருவர் புகார் அளித்ததை தொடர்ந்து போலசார் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போது இது தெரியவந்துள்ளது. நோய்வாய்ப்பட்ட தாயை கவனித்துக் கொள்வதில் மகன் மற்றும் மருமகளுக்கு சலிப்பு ஏற்பட்டதை தொடர்ந்த பெற்ற தாயையை கொலை செய்து விட்டதாக கூறப்படுகின்றது, மனைவியும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார். மகனின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடக்க முடியாதவரால் குதிக்க முடியாதே என ஆரம்பத்திலேயே போலிசாருக்கு சந்தேகம் இருந்துள்ளது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval