Monday, January 29, 2018

சொத்திற்காக சொந்த தங்கை செய்த கொடுமை , அக்காவிற்கு நேர்ந்த பரிதாபம்!

மேற்கு வங்கம், கொல்கத்தா, டும் டும் : தாய் இறந்த பின் சகோதரி ஒருவர் தனது மூத்த சகோரியை சொத்தை தனது பெயருக்கு எழுதிக் கொடுக்குமாறு தொடர்ச்சியாக துன்புறுத்தி வந்துள்ளார்.
மூத்த சகோதரி சற்று மனம் நலம் குன்றியவர் என்பதால் பெற்றோர் குடும்ப சொத்தை மூத்த சகோதரியின் பெயருக்கு எழுதி வைத்து இறந்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த இளைய சகோதரி மூத்த சகோதரியை சொத்துக்களை தனது பெயருக்கு எழுதிக் கொடுக்குமாறு துன்புறுத்தி வந்துள்ளார். மூத்த சகோதரியின் அலறல் சத்தம் தினந்தோறும் கேட்டுக் கொண்டிருந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள் என கேட்டுள்ளனர்.
நான் அடிக்கவில்லை அப்படி எதுவும் எங்கள் வீட்டில் நடக்கவில்லை என இளைய சகோதரி மறுத்துள்ளார். போலிசில் இதை புகார் செய்ய முடிவு செய்த அரவிந்த என்ற பக்கத்து வீட்டுகாரர் மூத்த சகோதரியை இளைய சகோதரி சித்ரவதை செய்வதை அவருக்கு தெரியாமல் பதிவு செய்துள்ளார்.
காவல் நிலையத்தில் இதை ஆதாரமாக காட்டி புகாரும் கொடுத்துள்ளனர். ஆனால் போலிசார் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என அரவிந்த் தரப்பில் கூறப்படுகின்றது. ஜனவரி 25 ஆம் தேதி புகார் கொடுததாக கூறப்படுகின்றது. சமூக வலைதளத்தில் தற்போது இந்த காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval