Monday, February 5, 2018

கணவரை கொல்ல முயன்ற ரவுடிகள், சிங்கம் போன்று சீறி பாய்ந்து வந்து துப்பாக்கியால் சுட்டு தள்ளி கணவரை காப்பாற்றிய மனைவி!

லக்னோ: மனைவியை கணவர் காப்பாற்றும் சம்பவங்கள் நடந்து பார்த்திருப்போம் ஆனால் இங்கு கணவரை மனைவி காப்பாற்றியுள்ளார். வீட்டு வாசலில் நின்ற கணவரை கேட்டிற்கு வேளியே அழைத்து 6 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ய தாக்குதல் நடத்துகின்றனர். அதில் ஒருவன் இரும்பு கம்பியை எடுத்து வந்து கணவரை தாக்குகின்றான்.
சத்தம் கேட்டு சிங்கம் போன்று லைசன்ஸ் பெற்ற துப்பாக்கியுடன் சீறி பாய்ந்து வருகின்றார் மனைவி, அனைவரையும் சுட்டு தள்ளுகின்றார். ரவுடிகள் பயத்தில் அலறி அடித்து ஓடுகின்றனர். பின்னர் கணவர் துப்பாக்கியை வாங்கி சுடுகின்றார்.
ரவுடிகள் ஓடினாலும் உன்னையும் உன் மனைவியையும் வெட்டி துண்டாக்காமல் விட மாட்டோம் என மிரட்டிவிட்டு ரவுடிகள் தப்பி ஓடியுள்ளனர். பாலிவுட் பட காட்சி போன்று அமைந்த இந்த சம்பவம் அவர் வீட்டின் சிசிடிவியில் அப்படியே பதிவாகியுள்ளது.
பட்டப்பகலில் நடந்த இந்த கொலை முயற்சி உபியில் சட்டம் ஒழுங்க மோசமடைந்து வருவதை காட்டுவதாக கண்டனங்கள் எழுந்து வருகின்றது. அதே நேரத்தில் மனைவியின் துணிச்சலுக்கு பாராட்டுக்களை குவிகிறது.
கணவர் பத்திரிக்ரைகயாளர் மனைவி வழக்கறிஞர். ரவுடிகளை போலிசார் தேடி வருகின்றனர்.
காணொளியில் இறுதியில் எதிர் வீட்டில் உள்ளவர்கள் சம்பவத்தை பார்த்து விட்டு அப்படியே கதவை மூடிக் கொள்கின்றனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval