Friday, February 2, 2018

மனிதநேயமற்ற செயலை தடுக்காமல் கை தட்டி வேடிக்க பார்த்த பொதுமக்கள் - வீடியோ

கேரளா கொச்சி: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை இரண்டு பெண்கள் நடுரோட்டில் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். அதை அனைவரும் சுத்தி நின்று வேடிக்கை பார்த்ததோடு அடிக்கும் பெண்களை பாராட்டி ஊக்கமும் கொடுக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் தனது கோர முகத்தை காட்டிய பெண் நெருப்பில் காய வைத்த கரண்டியை எடுத்து வந்து எழ முடியாமல் ரோட்டில் அசைவற்று படுத்து கிடக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் காலில் வைத்து சூடு வைக்கின்றார் சூடு தாங்கள் அவர் எழ முற்படுகின்றார்.
தாக்கிய இருவரும் அந்த பெண்ணின் பக்கத்து வீட்டு காரர்கள், மனநலம் சரியில்லாததால் தங்களுக்கு தொந்தரவு கொடுப்பதாக கூறி இந்த பெண்ணை இரக்கமற்று தாக்கியுள்ளனர்.
ரோட்டில் தரதரவென இழுத்து வந்து டீ கடை அருகே வைத்து தாக்கியுள்ளனர். தடுக்க வேண்டிய பொதுமக்கள் கைதட்டி வேடிக்கை பார்த்துள்ளனர். தனது தாய் தாக்கப்படுவதை பார்த்து தடுக்க வந்த மகளையும் இந்த இரண்டு பெண்கள் தாக்கியதாக கூறப்படுகின்றது.
போலிசார் இதில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval