Sunday, February 25, 2018

தப்பி தப்பி தற்கொலைக்கு முயலும் காதல் மனைவியை பிரிந்த நபர் இந்த முறை உக்கடம் கோவில் கோபுரம்

ஆங்கிலோ இந்தியன் ஆனா ஐரின் முதலில் ஈரோட்டில் மின்சார கம்பியில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். அவரை போலிசார் காப்பாற்றினர். பின்னர் நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்து ட்ரைவர் ஐரினை காப்பாற்றினார்.
பின்னர் சிகிச்சைக்கு பின் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட ஐரினை போலிசார் விசாரித்து அனுப்பி வைத்தனர்.
வெளியே வந்தவுடன் முன்றாவது முறையாக உக்கம் காவல் நிலையம் அருகே உள்ள மாகாளியம்மன் கோயிில் கோபுரத்தின் உச்சியில் ஏறி மீட்டும் தற்கொலை மிரட்டல் விட்டுள்ளார் ஐரின்.
என்னையா இந்த ஆளுக்கு இதே வேலையா போச்சு என ஒரு லாரியை கொண்டு வந்த போலிசார் அவரை இறங்குமாறு கூறியுள்ளார். ஆனால் அவர் இறங்காமல் போலிசாருக்கு 3 வது முறையாக ஆட்டம் காட்ட ஆரம்பித்தார்.
கம்பை வைத்து குத்தினால் லாரியில் குதிப்பார் காப்பாற்றி விடலாம் என கம்பை வைத்து குத்துகின்றனர். ஆனால் ஐரின் லாரியில் குதிக்காமல் பின் பக்கத்தில் குதித்து விட்டார் ஐரின். இதில் அவருக்கு இந்த முறை காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
தனது காதல் மனைவி கோபித்துக் கொண்டு தன்னை விட்டு பிரிந்து விட்டதால் அவரை பார்க்க பொள்ளாச்சி வந்துள்ளார் ஐரின். அப்பொழுது தான் 3 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval