Tuesday, February 27, 2018

தற்கொலை செய்யும் முன் உயிர் வாழ உதவி கேட்டு கதறிய வேலூர் பெண் சத்யா

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே நாட்றம்பள்ளியை சேர்ந்த சத்யா என்ற பெண் கணவரிடமிருந்து தன்னை காப்பாற்றுமாறு இரத்த காயங்களுடன் அழுதபடி பேசும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 25 ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சத்யா என்ற பெண் தான் காணொளியில் இருப்பது என்பது தற்போது தெரியவந்துள்ளது.
கடந்த 25 ஆம் தேதி வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் சத்தியா. இதை காவல் துறை தற்கொலை வழக்காக பதிவு செய்திருந்த நிலையில் சத்யா பேசியுள்ள காணொளி தற்போது வெளியாகி அவரது தற்கொலையில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
தானும் தனது குழந்தையும் நரக வாழ்கை வாழ்வதாகவும் தன்னை ஒரு தங்கை போன்று நினைத்து காப்பாற்றுமாறும் சத்யா காணொளியில் உருக்கமாக பேசுகி்ன்றார்.
கணவர் தன்னை வீட்டில் அடைத்து வைத்து சோறு தண்ணி இல்லாமல் சித்ரவதை செய்வதாக சத்யா கூறுகின்றநார்
கணவரை நம்பி வந்த தனக்கு பல கொடுமைகள் நடந்ததாகவும் சத்தியா காணொளியில் கூறுகின்றார்.
தன்னிடம் செல்போன் இல்லை வேறு ஒரு நபரின் செல்போனை வாங்கி இதை பதிவு செய்கின்றேன் எனக் கூறுகின்றார் சத்யா.
தன்னை கணவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் தான் வாழ ஆசைப்பபடுவதாகவும் யாராவது நான் வாழ உதவி செய்யுங்கள் எனவும் சத்தியா கண்ணீர் மழ்க பேசுகின்றார்.
காணொளி வைரலாகுவதற்கு முன்பாகவே சத்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார். சத்யாவின் காணொளியை தற்போது பார்ப்பவர்கள் சத்தியாவின் கணவர் சம்பத் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த பெண் ரத்த கரையுடன் தன்னை காப்பாற்றுமாறு பேசியும் ஏன் அவர் காப்பாற்றப்படவில்லை. குறைந்தபட்சம் காணொளியை பதிவு செய்தவருக்காவது இந்த தகவல் தெரிந்திருக்கும் இதன் பின்னணி என்ன தற்கொலை செய்து கொண்டாரா கொல்லப்பட்டரா இவரின் நிலை குறித்து தெரிந்தும் உதவி செய்யப்படாமல் விடப்பட்டாரா அல்லது வேறு ஏதுமா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval