Tuesday, February 13, 2018

மாணவன் தற்கொலை

Image may contain: tree, outdoor and nature
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் போகும் சாலையில் அமைந்துள்ள மவுண்ட் கார்மல் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 12 வகுப்பு படித்து வந்த பெரியக்கோட்டை மெயின்ரோடு ரவி அவர்களின் மகன் சந்தோஷ் என்ற மாணவனை பள்ளியின் ஆசிரியர் கடும்சொற்களை கொண்டு திட்டி பள்ளியை விட்டு வெளியேற்றியதால் மனமுடைந்த மாணவன் சந்தோஷ் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார்
கல்வி என்கிற பெயரில் வியாபாரவெறியில் தரம் இல்லாத ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்தும் இதுபோன்ற பள்ளிகள் சந்தோஷ் போன்ற பல மாணவர்களின் உயிரை தினம் தினம் குடித்துகொண்டு தான் இருக்கிறது
ஒரு மாணவனை எவ்வாறு வழி நடத்த வேண்டும் பாடம் புகட்ட வேண்டும் என்று தெரியாத ஆசிரியர்களை பணிக்கு அமர்த்திய பள்ளி நிர்வாகத்திடம் முறையிட போன ஊர் மக்களை எல்லாம் அலட்சியப்படுத்தியதால் ஆத்திரம் அடைந்த ஊர்மக்கள் பள்ளி எதிரே சாலை மரியல் போராட்டம் நடத்தி வருகின்றனர் !!
இதுபோன்ற பள்ளி நிர்வாகம் நம் மண்ணில் இருந்தால் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோகுமோ தெரியவில்லை
தாய் தந்தையின் கனவை எல்லாம் தற்கொலையில் முற்றுபுள்ளி வைத்து தன்னை மாய்த்துகொண்ட மாணவன் சந்தோஷ் இழந்து வாடும் பெற்றோர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்
முடிந்தவரை பரப்புங்கள் பள்ளி நிர்வாகத்தினருக்கு தண்டனை கிடைக்கும் வரை பரப்புங்கள்
COURTESY;FACSBOOK

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval