Friday, February 23, 2018

விதவை பெண்ணை கொடூரமாய் தாக்கி ஆடைகளை கிழித்து மானபங்கப்படுத்திய கணவர் குடும்பத்தார்

திரிபுரா அமர்புர்: இளம் பெண்ணை கணவரின் உறவினர்கள் பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து அடித்து சித்ரவதை செய்ததோடு அந்த பெண்ணின் உள்ளாடை முதற்கொண்டு அவரது ஆடைகளை கிழித்து மானபங்கபடுத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுரா மாநிலம் அமர்பு பகுதியில் மயிலக் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதுள்ளது. பரிமலா மற்றும் ரஜிப் ஷீல் இருவருக்கும் திருமணம் நடைபெற்று 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவர் ரஜிப் வீட்டில் தான் தனியாக இருக்கும் போது தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ரஜிப் மற்றும் பரிமலா ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
ஏற்கனவே பரிமலா மீது கோபத்தில் இருந்த ரஜிப் வீட்டார் கணவர் ரஜிப் தற்கொலைக்கு பரிமலதான் காரணம் என சந்தேகப்பட்டு கணவரை இழந்து விதவையாய் நின்ற பரிமலாவை நடுரோட்டில் வைத்து கடுமையாக தாக்கி மானபங்கப்படுத்தியுள்ளனர்.
ரஜிப் ன் சகோதரிகள் மற்றும் உறவினர்கள் பரிமலாவை தாக்கும் போது ஒருவரும் அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்துள்ளனர். அந்த வேடிக்கை பார்த்தவர்களில் அந்த பகுதி காவல்துறையும் அடக்கும் என்பது மற்றுமொரு புகராக எழுந்துள்ளது.
கணவரை இழந்து நின்ற அந்த பெண்ணை அடித்து உதைத்து ஆடைகளை கிழித்து நடுரோட்டில் சுயநினைவின்றி கிடந்த போதும் ஒரு பெண் இறக்கமின்றி அந்த பெண்ணின் தலைமையில் மிதிக்கின்றார். தகாத இடங்களில் அந்த பெண் தாக்கப்படுகின்றார்.
4 5 பெண்கள் சேர்ந்து கொண்டு ஒரு விதவை பெண்ணை இரக்கமின்றி தாக்கியுள்ளனர்.
இறுதியில் போலிசார் வந்து அந்த பெண்ணை மீட்டு மருத்துமவனையில் சேர்த்து தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.
5 வயது குழந்தையை போலிசார் தற்போது தங்களது பாதுகாப்பில் வைத்துள்ளனர். வழக்கு பதிவு செய்யப்படடும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval