Wednesday, February 7, 2018

அறிய வேண்டிய அரிய மனிதர்கள்



Image may contain: 1 person, hat and closeup
ஏபிஎம் முதலாளி ...
குமரிமாவட்டத்தில் சிறிய கடலோர கிராமமான புத்தன்துறையில் பிறந்து இலங்கையில் மாபெரும் வணிக சாம்ராஜ்யம் நிறுவிய பெருமகனார் மர்ஹூம் ஏ.பி.எம்.நூஹு என்ற ஏபிஎம் முதலாளி..
ஆரம்பத்தில் சம்பை கருவாடு ஏற்றுமதி இறக்குமதி வணிகம் செய்து வந்த ஏபிஎம் அவர்கள் 1950 களில் துவங்கிய Ye Pee Yem brand தேங்காய்எண்ணெய் கொழும்புவில் பிரபலமானது..
APM Noohu Shipping Cylon Ltd என்ற தனது நிறுவனம் மூலம் தூத்துக்குடி கொழும்பு இடையே கப்பல் போக்குவரத்தும் நடத்தயுள்ளார் ..
Eastern Maritime என்ற நிறுவனம் துவங்கி ஐந்து கப்பல் கம்பெனிகளின் இலங்கை ஏஜென்டாக செயல்பட்ட ஏபிஎம் முதலாளியிடம் 1500 பேர் பணிபுரிந்துள்ளனர்..
இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவின் நெருங்கிய நண்பராகவும்திகழ்ந்தார் ஏபிஎம் முதலாளி ...
இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய இடம்பிடித்த வ உ சி ஓட்டிய கப்பலை பிற்காலத்தில் வாங்கிய பெருமையும் ஏபிஎம் முதலாளியை சாரும் என்பது ஆச்சர்யமான செய்தி...
நன்றி: குளச்சல் அஜீம்
(ஆதாரம்: இலங்கை எழுத்தாளர் மானாமக்கீன் எழுதிய "வரலாற்றில் இலங்கை கண்ட குமரி "புத்தகம்)

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval